Followers

Sunday, November 15, 2015

அண்ணன் பாக்கியம்


ணக்கம்!
          ஒரு குடும்பத்தில் மூன்று பையன்கள் இருந்தால் அதில் மூத்தவர் நன்றாக இருந்தால் அதாவது சரியான நபராக இருந்துவிட்டால் பிறகு இருக்கும் சகோதர்கள் நன்றாக வளர்ந்துவிடுவார்கள். மூத்த சகோதர் சரியாக இல்லை என்றால் இளையவர்களாக இருக்கும் நபர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.

முக்கால்வாசி நபர்களுக்கு மூத்த சகோதர் பிரச்சினையை தருபவர்களாகவே இருப்பார்கள். குடும்பத்தில் இருக்கின்ற சொத்தை எல்லாம் ஆட்டையை போட்டுக்கொண்டு இளைவர்களை சந்தியில் நிற்க வைத்துவிடும் கதையும் நிறைய நடக்கின்றது.

பொறுப்போடு இருந்து குடும்பத்தை நடத்துபவர்களாக இல்லாமல் அவர்களே தன் இஷ்டத்திற்க்கு நடந்துக்கொண்டு தன் மக்களுக்கு மட்டும் நல்லது செய்பவர்களாக இருப்பார்கள். 

ஒருவர்க்கு பாக்கியம் நன்றாக இருந்தால் மூத்தவர் நன்றாக அமைந்து குடும்பத்தை தாங்குபவர்களாக இருப்பார்கள். பாக்கியம் இல்லை என்றால் மூத்தவர்  சரியாக அமைய மாட்டார்கள். பாக்கியஸ்தானம் முக்கால்வாசிப்பேருக்கு நன்றாக அமையவில்லை என்பது கொஞ்சம் வெளியில் சுற்றிப்பார்த்தாலே தெரியும்.

நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அண்ணன்காரன் தம்பியை ஏமாற்றியவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். இப்படி ஏமாற்றி அவர்களின் பிள்ளைகள் நன்றாக வாழ்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: