Followers

Sunday, November 22, 2015

பரிகாரம்


ணக்கம்!
          நிறைய பேர்களின் ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அதில் தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை பார்க்கும்பொழுது தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் என்று ஏதாவது ஒரு பணத்தை புரோகிதர்களுக்கு கொடுத்த பிறகு தான் அவர்களின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.

பரிகாரம் செய்கிறார்களா அல்லது செய்யவில்லை என்பதைவிட இவர்களிடம் இருந்து பணம் ஒரு தொழில் செய்வர்களுக்கு செல்லும்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களின் தோஷம் விலகுகிறது. என்னுடைய அனுபவத்தில் நான் நிறைய இதுபோன்று பார்த்திருக்கிறேன்.

உங்களுக்கு தோஷம் இருந்தால் கண்டிப்பாக அதற்கு பரிகாரமாக ஏதாவது ஒன்று செய்யவேண்டும். குறைந்தது சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு ஒரு விளக்காவது ஏற்றும்பொழுது மட்டுமே அவனை கொஞ்சம் விட்டுவைக்கிறது.

ஏதோ ஒரு செயல் அதாவது ஆன்மீகவழியில் ஒன்று நடைபெற்றால் கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடைபெறுகிறது. உங்களின் தடை விலகுகிறது. தடை விலகினாலே போதும் நீங்கள் வெற்றி பெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Aanmeega arul ithuthaano