Followers

Sunday, November 8, 2015

கடவுள் எனக்கு கொடுத்த பாக்கியம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் எனது சொந்த அனுபவத்தைப்பற்றி சொல்லுகிறேன். நமது தளத்தில் கட்டணசேவையில் சோதிடம் பார்க்கும் வசதியை ஏற்படுத்திய பிறகு பல நண்பர்கள் அதில் சோதிடபலனை கேட்டு தெரிந்துக்கொண்டார்.

சோதிடபலனை கேட்பதற்க்கு நமது நண்பர்கள் ஒரு சிலர் ஏன் பாதிபேர் ஒரு தந்திரத்தை என்னிடம் செய்வார்கள். அவர்களின் பிறந்த விபரத்தை தெரிவித்துவிட்டு அதன் பிறகு கேள்வி எல்லாம் கேட்டு அனுப்புவார்கள். 

நான் உடனே அவர்களுக்கு பலனை போனில் சொல்லிவிடுவது உண்டு. இவர்கள் செய்யும் தந்திரம் என்ன என்றால் உங்களின் வங்கிகணக்கிற்க்கு பணத்தை எனது வங்கிகணக்கில் இருந்து மாற்றுகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு பலனை கேட்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் உடனே பலனை நான் சொல்லிவந்தேன். நாளை பணம் உங்களின் வங்கிகணக்கிற்க்கு வந்துவிடும் என்பார்கள். நான் இதனைப்பற்றி எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. மறுநாள் பார்த்தால் பணம் எனது வங்கிகணக்கிற்க்கு வராது.

ஒரு ஆள் ஏமாற்றும்பொழுது இதனைப்பற்றி எனக்கு நன்கு தெரிந்துவிட்டது. தொடர்ந்து பல நண்பர்கள் இப்படி ஏமாற்றி பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு நான் பலனை சொல்லிக்கொண்டு தான் இருந்தேன். 

எனது முக்கால்வாசி கர்மாவை இவர்கள் வழியாக தான் எனக்கு எடுக்க முடிந்தது. ஏன் என்றால் ஒரு சோதிடகாரனுக்கு தட்சணை இல்லாமல் சோதிடம் பார்த்தால் எப்படிப்பட்ட கர்மா வரும் என்பது எல்லாேருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி இருந்தும் இப்படிப்பட்ட நபர்கள் வந்தார்கள். விளையாட்டாக நினைத்து இதனை என்னிடம் செய்தார்கள். கடவுள் எனக்கு கொடுத்த ஒரு அற்புத பாக்கியமாகவே இதனை நான் கருதினேன்.

தற்பொழுது இதனை நிறுத்திவிட்டேன். நிறுத்தியதற்க்கு காரணம் இன்று நான் இருக்கும் வேலை பளு காரணம் என்று சொல்லலாம். நமது கர்மாவை இப்படி எடுக்க நமக்கு கடவுள் கொடுத்த பாக்கியம் இது. ஒவ்வொருவரும் என்னை ஏமாற்றும்பொழுது நான் நினைத்துக்கொள்வது உண்டு. பல ஜென்ம கர்மாவை இப்படி எடுப்பதற்க்கு ஒரு பாக்கியத்தை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றியை சொல்லவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment: