Followers

Friday, November 13, 2015

வேலை வாய்ப்பு


ணக்கம்!
          கல்வியை பற்றி சொல்லும்பொழுது நல்ல பண்பு இல்லை என்று சொன்னேன். நல்ல பண்பு என்பதை விட பல பேருக்கு பொறாமை எண்ணம் அதிகம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

படித்த இத்தனை பேர் இருக்கும்பொழுது அந்தந்த கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் இருந்திருந்தால் இன்றைக்கு பல கிராமங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று இருக்கும்.

ஒவ்வொரு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் போராடி ஒரு வேலையை தேர்ந்தெடுக்கின்றனர். அந்தந்த துறையில் இருப்பவர்களே அவர்களின் சொந்த ஊரில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்திருக்க முடியும். அடுத்தவர்கள் முன்னேறிவிடுவார்கள் என்ற ஒரு சின்ன புத்தி தான் இது.

ஒருவருக்கு நாம் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் அந்த நபரின் குடும்பம் பயன்பெற்றுவிடும் இப்படி நீங்கள் செய்தாலே அதுவே மிகப்பெரிய பாக்கியம். பாக்கியஸ்தானம் எந்தவிதத்திலும் உங்களை தடை செய்யாமல் ஒதுங்கி வழிவிடும். அதாவது தடை ஏற்படாமல் காரிய வெற்றி கிடைத்துவிடும்.

இன்று அம்மன் பூஜை. அம்மன் பூஜை காலை வேலையில் நடைபெறுகிறது. அம்மனிடம் புதிய வேண்டுதலை வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: