Followers

Wednesday, November 4, 2015

பாக்கியஸ்தானமும் இலவசசேவையும்


வணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தில் இலவசசோதிடசேவைப்பற்றி நீங்கள் அறிந்த ஒன்றே. ஜாதககதம்பம் ஆரம்பித்த நாட்களில் இருந்து இலவசசேவை தொடக்கப்பட்ட ஒன்று. அது சமீபகாலமாக நிறுத்தப்பட்டது. 

இந்த சேவை செய்ய தொடங்கிநாட்களில் இருந்து எனக்கு மிகுந்த திருப்தி அளித்தது. ஏன் என்றால் நம்மால் பிறர்க்கு இலவசமாக வழிகாட்டப்படுகிறது. அதனால் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படுகிறது.

பாக்கியஸ்தானம் சொன்னபடி இலவசமாக பிறர்க்கு செய்வதால் நமது வாழ்வும் நன்றாக இருந்தது. உண்மையை சொன்னால் அதனை செய்த காரணத்தால் எனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளமுடிந்தது. 

இலவசசேவை என்பது சோதிடம் தெரியாதவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் அதனை விட்டுவிட்டு ஒவ்வொருவரும் சும்மா ஏதாவது சந்தேகம் கேட்க தொடங்கிவிட்டனர். அதோடு நக்கலாகவும் அது இருந்த காரணத்தால் அந்த சேவையை நிறுத்திவிட்டேன்.

ஒன்று நன்றாக நடந்தால் அதனை தடுப்பதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதனை நம் மக்கள் சரியாக செய்வார்கள். இலவசசேவை செய்த நாட்கள் ஒரு நல்ல பாக்கியம் செய்த நாட்களாகவே இருந்தது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: