Followers

Thursday, November 19, 2015

குரு தரும் பாக்கியம்


ணக்கம்!
          குரு ஒன்பதாவது வீட்டில் ஒருவர்க்கு அமைந்தால் அந்த நபர் சிறந்த பாக்கியம் உடையவராக திகழ்வார். ஒரு சில ஜாதகருக்கு இப்படி அமைவது உண்டு. அதாவது ஒன்பதாவது வீடு நட்பு வீடாக அமைந்து தீயகிரகங்கள் பார்வை இல்லாமல் இருக்கும்பொழுது அதிகப்படியான நன்மைகளை வாரி வழங்கும்.

ஒரு சிலருக்கும் ஒன்பதாவது வீட்டில் தனித்து அமர்ந்து இருந்தால் ஒரு சில ஜாதகங்களில் மட்டும் நன்றாக பாக்கியம் அமைவதில்லை அதாவது நல்ல பலனை தருவதில்லை. ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசப்படும். அதில் ஒன்று இப்படிப்பட்ட பலன்களை வழங்குகிறது.

குரு ஒன்பதாவது வீட்டில் அமைந்த நப்களுக்கு பொதுவான பலன்களாக அவர்கள் சிறந்த நடத்தையை உடையவர்களாக திகழ்கின்றார்கள். நல்லவர்களாக அதுவும் அனைவருக்கும் பயன்படுபவராக இருக்கின்றனர்.

ஒரு வேலை இப்படிப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைகின்றது என்று நினைக்கிறேன். தந்தை செய்யும் நன்மை கண்டிப்பாக வாரிசுகளுக்கு வரும் என்று நம்பிக்கையோடு சொல்லலாம்.

ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து குரு தசா அல்லது அதனின் புத்தி நடைபெறும் காலத்தில் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். ஒன்பதாவது வீட்டில் குரு அமர்ந்து தசாவை நடத்தினாலும் ஒரு சிலர் மட்டுமே தர்ம காரியங்களில் அதிக நாட்டம் ஏற்பட்டு தர்மம் செய்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

கார்த்திக் சரவணன் said...

தனுர் லக்னத்தில் பிறந்த எனக்கு ஒன்பதில் குரு... இப்போது குருதசா ஆரம்பித்திருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் குருவுடன் சனி, ராகு, செவ்வாய் சேர்க்கை இருக்கிறது...