Followers

Saturday, November 21, 2015

அனுபவம்


ணக்கம்!
          நேற்று ஒரு இரத்த சம்பந்தப்பட்ட இறப்பு ஒன்று ஏற்பட்டது. சென்னை வந்துவிட்டு இன்று விடியற்காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன். நேற்று இறப்பு என்பதால் பதிவை தரமுடியவில்லை.

நமக்கு ஏற்படும் அனுபவத்தை வைத்து தான் ஜாதககதம்பம் எழுதப்படுகிறது. நேற்று அடைந்த ஒரு அனுபவத்தை உங்களுக்கு சொல்லுகிறேன். நம்ம ஆட்கள் வேலை தேடி சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லுகின்றனர். இப்படி செல்லும் ஆட்கள் சென்னையிலேயே தங்க நேரிட்டாலும் அவர்களின் பூர்வீகத்தை மறக்ககூடாது.

தன்னுடைய வாரிசுகளுக்கு பூர்விகத்தைப்பற்றியும் பூர்வீகத்தின் உறவினர்களைபற்றி நன்றாக தெரிந்துவைக்க ஏற்பாடு செய்யவேண்டும். பல குடும்பங்களின் தந்தையோடு சொந்த ஊர் எது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தாலும் ஒருவன் நகரத்தில் இறக்கும்பொழுது அவன் பிச்சைக்காரன் போல் தான். பிணத்திற்க்கு அருகில் அவனின் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரும் இருப்பதில்லை. இதே இறந்தவனின் சொந்த ஊரில் அவன் இறந்தால் ஆயிரம்பேர் இருப்பார்கள்.

பொதுவாக நமது இந்துக்கள் செய்யும் பெருமையான தவறு இறப்பவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுவதில்லை. வேலை காரணம் என்று காட்டி நகரத்திலேயே அடக்கம் செய்கின்றனர் இது பெரிய தவறு. எந்த ஊரில் அவன் பிறந்தானோ அதே ஊரில் அடக்கம் செய்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: