Followers

Thursday, December 10, 2015

புதையலை கொடுக்கும் சுக்கிரன்


ணக்கம்!
          ஒன்பதாவது வீட்டிற்க்கு குரு காரணம் வகிப்பவர் என்றாலும் அதில் அமரும் ஒரு சில தீமை கிரகங்கள் கூட ஜாதகருக்கு நல்லதை செய்துவிட்டு செல்லும். இது படைத்தவனின் கையில் இருக்கும் ஒரு வித்தை என்று கூட சொல்லலாம்.

ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் அமையபெற்ற ஜாதகர்கள் பல பேரை நான் பார்த்திருக்கிறேன். மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கின்றார்கள். யாருக்கே கிடைக்காத பொக்கிஷங்கள் எல்லாம் இவர்களுக்கு கிடைக்கிறது.

புதையல் போன்று ஒரு பொருள் இவர்களுக்கு கிடைக்கும் அதனை வைத்தே பல மடங்கு செல்வந்தராக மாறிவிடுவார்கள். இன்றைய காலத்தில் புதையல் போல் பல மடங்கு உள்ள பொருட்கள் எல்லாம் இருக்கின்றது புதையல் இல்லாவிட்டாலும் அது போன்ற ஒரு பொருள் இவர்களுக்கு கிடைக்கும்.

ஐந்தாவது வீடு தானே புதையல் லாட்டரி சீட்டு போன்றவைக்கு காரணம் நீங்கள் என்ன டா என்றால் ஒன்பதாவது வீட்டை சொல்லுகின்றிர்களே என்று கேட்கதோன்றும். ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் அமைந்த ஜாதகர்களின் வாழ்வை உற்று நோக்கினால் அவர்களின் வாழ்வில் இப்படி நடப்பதை நீங்களே அறிந்துக்கொள்ளலாம்.

ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பவர்கள் பிராமணர்களைவிட வேறு ஜாதியில் இருப்பவர்களை தங்களின் குருவாக வைத்திருந்தால் அவர்களுக்கு வெற்றி உறுதி என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

bavath baavaga murai padi, onbadhaavadhu veetai lagnamaaga eduthu kondaal 5 aam veedu adharku baagiyasthaanam, 5 aam veedai lagnamaaga eduthu kondaal 9 aam veedu adharku 5 aam veedu aagiradhu adhanaal 9 il guru alladhu sukiran amaya petraal periya adirshtamundu