Followers

Wednesday, December 30, 2015

அனுபவம்


வணக்கம்!
          ஒவ்வொருவரையும் சந்திக்கும்பொழுது அவர்களை நான் நன்றாக கவனிப்பேன். கவனிக்கும்பொழுதே தெரிந்துவிடும் பல சாமியார்களை தேடி சென்றவர் என்று அவர்களே காட்டிக்கொடுத்துவிடுவார்கள்.

நம்ம ஆட்கள் ஒவ்வொரு ஆன்மீகவாதியாக சென்று கையில் கயிறு கட்டுதல் கழுத்தில் தாயத்து கட்டுதல் ரசமணியை கட்டுதல் என்று ஏகாப்பட்ட கட்டு கட்டி இருப்பார்கள். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். மீண்டும் இதனைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

ஒரு சிலருக்கு இப்படி சாமியார்களை தேடிசெல்லும் விதி அவர்களின் ஜாதகத்தில் இருக்கும். அந்த காரணத்தால் பல பேரிடம் சென்று வருவார்கள்.இதுவே இவர்களுக்கு பிரச்சினையை கொடுக்கும் ஒரு விசயமாகவும் அமைந்துவிடுகிறது.

பிரச்சினை அதிகம் இருக்கும்பொழுது சாமியார்களை தேடிச்செல்லுவது ஒரு இயல்பான ஒரு விசயம் தான் அதற்க்காக இதனையே தொழிலாக வைத்துக்கொள்ள கூடாது. அப்படியே சாமியார்களை சந்தித்தாலும் அவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட பொருட்களை வாங்கி உங்களின் உடலில் வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களின் நன்மைக்காக இதனை சொல்லுகிறேன்.

2 ஆம் தேதி அம்மன் பூஜை நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: