Followers

Friday, December 18, 2015

முன்னோர் சொத்தும் பாக்கியஸ்தானமும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானம் தந்தை காட்டும் இடம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தந்தையை காட்டும் இடத்தில் நமக்கு கெடுதல் கிரகங்கள் அமைந்தால் அது நமக்கு பிரச்சினையை கொடுக்கும் என்பது தெரியும். 

பொதுவாக நான் எனது ஊரில் சோதிடம் மற்றும் ஆன்மீக வேலைகளை செய்வது கிடையாது. நான் இதனை செய்ய தொடங்கிய நாள் முதலில் இருந்தே பல வெளியூர்களுக்கு சென்று தான் இதனை செய்து இருக்கிறேன். ஜாதககதம்பம் எழுத தொடங்குவதற்க்கு முன்பே எனக்கு பல ஊர்களிலும் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

வெளியூர்களுக்கு சென்று சோதிடம் பார்த்த காரணத்தால் அந்தந்த ஊர்களில் என்னன்ன நடக்கிறது என்பதைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அதிகப்பட்சம் அனைத்து மாவட்டத்திற்க்கும் சென்று வந்திருக்கிறேன்.

அனுபவத்தில் கற்ற பாடம் அதிகம். இப்படி சென்ற ஊர்களில் எல்லாம் அதிகப்பட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் அவர் அவர்களின் குடும்ப சொத்து தகராறு காரணமாக பிரிக்கபடாமல் இருக்கின்றது. குடும்ப சொத்து கோர்ட்டில் பிரச்சினையால் வழக்காக இருக்கின்றது.

குடும்பத்தில் உள்ள நபர்கள் அதிகமான சொத்திற்க்கு ஒவ்வொருவரும் ஆசைப்பட்டு இப்படி செய்துக்கொண்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டில் அதிகமாக வெட்டு குத்து நடப்பதும் இப்படி சொத்து தகராறு காரணமாக அண்ணன் தம்பிக்குள் சண்டை சச்சரவு இருக்கின்றது.

பொதுவாக இதனை பேசி தீர்த்துக்கொள்ளலாம் ஆனால் சமாதானத்திற்க்கு செல்லாமல் அனைவரும் கோர்ட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். இது எல்லாம் என்று வெற்றி பெற்று இவர்களுக்கு கிடைக்கும். இப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தை வாங்கி பார்த்தால் அவர்களின் பாக்கியஸ்தானம் கெட்டு இருப்பதை பார்க்கலாம்.

இதனை படிக்கும் நீங்களும் ஏதாவது ஒரு வழியில் முன்னோர்களின் சொத்துக்கள் பிரச்சினையில் உள்ளதை அனுபவத்தில் பார்த்து இருக்கலாம் அல்லது உங்களுக்கே இப்படி நடந்திருக்கலாம்.

இதற்கு எல்லாம் ஒரு வழி என்ன என்றால் சமாதானமாக செல்வது நல்லது .உங்களின் பாக்கியஸ்தானத்தில் என்ன கிரகம் அமைந்திருக்கிறதோ அதனை பார்த்துவிட்டு அதற்கு பரிகாரத்தை செய்துவிட்டு அதன் பிறகு சமாதானத்திற்க்கு செல்வது நல்லது.

பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்யாமல் சென்று சமாதானம் பேசினால் உங்களுக்கு பிரச்சினை தான் மிஞ்சும். சமாதானத்தை எதிர்தரப்பினர் ஏற்கமாட்டார்கள் அதனால் பரிகாரத்தை செய்துவிட்டு பேசுங்கள். நாட்டின் பிரச்சினையை பேசி தானே தீர்க்கிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் கோர்ட் கேஷ் என்று அலையவேண்டும். பணம் செலவு செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: