Followers

Sunday, December 27, 2015

அனுபவம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை படித்துவிட்டு நமது நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் போன் செய்து என்னுடைய பாக்கியஸ்தானம் எப்படி இருக்கின்றது என்பதை கேட்கிறார்கள். ஒருவர் ஆன்மீகப்பக்கம் வருகிறார்கள் என்றால் அவ்வளவு எளிதில் வந்துவிடமுடியாது. அந்தளவுக்கு அடிப்பட்டு தான் வருவார்கள். ஏன் அடிபடுகிறார்கள் என்றால் பாக்கியஸ்தானம் வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

எனக்கு நல்லவாழ்க்கை அமைந்துவிட்டது தெரிந்துக்கொள்வதற்க்கு தான் ஜாதககதம்பத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன் என்றால் உங்களுக்கு பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது. நல்ல வாழ்க்கை அமையவில்லை என்று இரண்டு தரப்பினரும் படிக்கலாம். யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருங்கள். விழிப்புணர்வோடு இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நாம் நன்றாக இருந்தாலும் கூட நாம் செய்யும் புண்ணியம் நமக்கு அடுத்த பிறப்பிலும் நன்மையளிக்கும் அப்படி இல்லை என்றாலும் நமது வாரிசுகளுக்கு நன்மையளிக்கும் என்பதால் இதனை எல்லாம் செய்யவேண்டும்.

நமது முன்னோர்கள் இதனை எல்லாம் சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அவர்கள் சொன்னாலும் இன்றைக்கு இருக்கும் தொலைதொடர்பு சாதனங்கள் அந்த காலத்தில் இல்லை. அது எல்லாம் இன்றைய காலத்தில் தான் வெளிப்படுகிறது.

நம்ம அப்பா இதனை எல்லாம் செய்யாமல் விட்டுவிட்டாலும் அவரை குறைச்சொல்லுவதை விட்டுவிட்டு நாம் இதனை எல்லாம் செய்வோம். சொத்தோடு நமது வாரிசுக்கு புண்ணியத்தையும் கொடுப்போம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: