Followers

Monday, December 14, 2015

பாக்கியஸ்தானத்தில் சந்திரன்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். பாக்கியஸ்தானத்தில் சந்திரன் அமைந்தாலும் அது நல்ல பாக்கியத்தை கொடுக்கும். பல நண்பர்களுக்கு நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். குரு மற்றும் சுக்கிரன் போல் பாக்கியத்தை வாரி வழங்ககூடிய ஒரு கிரகம் தான் சந்திரனும்.

பாக்கியஸ்தானத்தில் சந்திரன் அமரும்பொழுது மிகப்பெரிய தொடர்பு எல்லாம் ஏற்படுத்திக்கொடுக்கும் இந்த காலத்தில் நல்ல தொடர்பு இருந்தால் பெரிய ஆளாக மாறிவிடுகிறார்கள் அல்லவா. பாக்கியஸ்தானத்தில் அமரும் சந்திரன் அப்பேர்பட்ட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறார்.

ஒன்பதில் அமரும் சந்திரன் பெருந்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். பெருந்தன்மை என்பது இன்றைய காலத்தில் இது குறைவாகவே இருக்கின்றது என்று சொல்லலாம். யாரும் எந்த விதத்திற்க்கும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்கள். ஒரு சின்ன விசயத்தை கூட பெரிய அளவில் கொண்டு போகாமல் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கும் நபர்களுக்கு பாக்கியம் நன்றாக இருக்கும். ஒன்பதில் அமரும் சந்திரன் அதனை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

சந்திரன் நிறைய சொத்துக்களை சேர்த்து கொடுத்தாலும் அதனை தர்மகாரியங்களுக்கு செலவிட இவர்கள் விளைவார்கள். அதனால் இவர்கள் அரசர்களை போல் வாழ்வார்கள் என்று சொல்லலாம்.

பொதுவாக சந்திரன் ஒன்பதில் அமரும்பொழுது இப்படிப்பட்ட பாக்கியத்தை ஏற்படுத்தி தரும். உங்களுக்கு அப்படி நடைபெறவில்லை என்றால் ஏதாவது சின்ன பிரச்சினை இருக்கும். ஜாதகத்தை பார்த்து பரிகாரத்தை செய்தால் நன்றாக வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: