Followers

Monday, December 28, 2015

பரிகாரம்


ணக்கம்!
          தற்பொழுது நிறைய நண்பர்கள் சோதிடம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே செய்யும் பரிகாரத்தை பரிந்துரை செய்வது உண்டு. 

பொதுவாக சோதிடம் பார்க்கும்பொழுது நீங்களே பரிகாரம் செய்வதுபோல் சொல்லுவது உண்டு. ஒரு சிலருக்கு பரிகாரம் எங்களின் மூலம் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள்.

எங்களின் வழியாக பரிகாரம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் சோதிடம் பார்க்கும்பொழுது என்னிடம் தெரிவித்துவிடுங்கள். இந்த பிரச்சினைக்கு நீங்களே பரிகாரம் செய்துக்கொடுத்துவிடுங்கள் என்றால் நானே உங்களுக்கு பரிகாரம் செய்துக்கொடுப்பேன்.

பரிகாரம் என்பதை நானே உங்களுக்கு செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது கிடையாது. இதனை தகவலாக தான் தெரிவிக்கிறேன். ஒரு சிலர் இதனை எதிர்பார்த்து என்னிடம் சோதிடம் பார்த்து இருக்கிறார்கள். நான் இவர்களே செய்துக்கொள்ளட்டும் என்று சொல்லி அனுப்பியுள்ளேன். பிறகு தான் இதனைப்பற்றி தெரியவந்தது அதனால் உங்களுக்கு சொல்லுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: