Followers

Thursday, December 24, 2015

பாக்கியஸ்தான அதிபதியின் நிலை


ணக்கம்!
           ஒன்பதாவது வீட்டு அதிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து அமைந்தால் பெரிய யோகம் கிடைக்கும்.  ஒன்பதாவது வீட்டு அதிபதி மற்றும் லக்கினாதிபதியும் பரிவர்த்தணை அடைந்தாலும் நல்ல யோகம் அமையும். எந்த வித கஷ்டமும் இல்லாமல் அனைத்தும் அவனை வந்தடையும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதியும் இரண்டாவது வீட்டு அதிபதியும் அதாவது தனவீட்டு அதிபதியும் சேர்ந்து அமைந்திருந்தால் ஜாதகனுக்கு உழைப்பே இல்லாமல் காசு வந்துக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு இதனை நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.

ஒன்பதாவது வீட்டு அதிபதியும் மூன்றாவது வீட்டு அதிபதியும் இணைந்த ஜாதகர்கள் அடிக்கடி பயணம் மேற்க்கொண்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு சில மருந்து பொருட்கள் விற்பவர்களின் ஜாதகத்தில் இப்படி இருக்கின்றது. ஒரு சிலர் வெளி இடங்களுக்கு சென்று சம்பாதிக்கும் நிலையில் இருப்பார்கள்.

மூன்றாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டு அதிபதியோடு இணையும்பொழுது ஒரு சிலருக்கு பிரச்சினை வருவது உண்டு. அதிக அலைச்சலை கொடுக்கும் வேலை நடக்காது. வேலை நடந்தால் கூட அந்த வேலையால் பெரிய அளவில் சம்பாதிப்பது கிடையாது.

ஒரு சிலருக்கு அவரின் தந்தைக்கும் அவருக்கும் பிரச்சினை இருக்கின்றது. அதிகப்படியான வம்பு வழக்குக்கள் வருகின்றன. அவர் அவர்களின் ஜாதகத்தைப்பபொறுத்து பலன் மாறுப்படும்.

இன்று பெரம்பலூர் செல்லுகிறேன். பெரம்பலூரில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: