Followers

Saturday, December 16, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          நேற்று ஒன்பதில் சுக்கிரன் எழுதியவுடன் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்னிடம் அதனைப்பற்றி சொல்லிருந்தனர். ஒன்பதில் சுக்கிரன் இருக்கும் நபர்கள் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிருந்தனர். தீமைகளை பற்றி எழுதுங்கள் என்றும் சொல்லிருந்தனர். பலர் எனக்கு அம்மனின் அருள் இருக்கின்றது. நீங்கள் சொன்னது தவறு என்றும் சொல்லிருந்தனர்.

நான் எழுதுவது பொதுபலன் என்பதை பல நேரத்தில் சொல்லிருக்கிறேன். ஒரு பலன் எழுதும்பொழுது அது அனைவருக்கும் சரியான பலனை கொடுக்காது. அவர் அவர்களின் ஜாதகத்தை எடுத்து அந்த பலனை சொல்லவேண்டும்.

ஏன் இத்தனை பேர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர் என்றால் அதுவும் ஒன்பதில் உள்ள சுக்கிரன் தான் காரணம் என்று சொல்லலாம். ஆன்மீகவாதி எப்படிப்பட்டவன் என்பதை அறியும் அறிவையும் ஒன்பதில் உள்ள சுக்கிரன் தான் உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார் என்றால் அது தான் உண்மையான ஒன்று.

ஒரு தீமையைப்பற்றி சொல்லுகிறேன். ஆன்மீகவாதியிடம் ஆழம் பார்ப்பதை விட்டுவிட்டு ஏதோ ஒரு ஆன்மீகவாதியிடம் தஞ்சம் அடைந்து உங்களுக்கு தேவையானதை நீங்கள் பெற்றாலே அது போதும்.

நமக்கு வரும் குருவை காட்டக்கூடிய இடத்தில் குரு நிற்பது தவறு. இரண்டு குருவும் ஒன்பதில் நிற்பது சோதிடவிதிக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். அனுபவ வாழ்க்கைக்கு சரியில்லை என்று சொல்லுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: