Followers

Friday, December 15, 2017

ஒன்பதில் சுக்கிரன்


வணக்கம்!
          ஒன்பதில் சுக்கிரன் இருந்தால் அவர்களுக்கு அம்மன் அருள் இருக்கின்றது என்று பல சோதிடர்களும் சொல்லிருப்பார்கள். ஒன்பதில் சுக்கிரன் இருந்தால் அம்மன் அருள் கிடைக்கும் என்பது சொல்லிவிடமுடியாது அது உண்மையல்ல. யாருக்காது ஒருவருக்கு  அம்மன் அருள் கிடைக்கும்.

ஒன்பதில் உள்ள சுக்கிரன் உங்களை அதிகமாக சோதிடம் ஆன்மீகம் மற்ற பிற ஆன்மீக சம்பந்தப்பட்ட வேலைகளை செய்பவர்களிடம் இழுத்து செல்ல வைக்கும். அதற்கு நீங்கள் அடிமையாக இருப்பீர்கள் என்று சொல்லலாம்.

ஒன்பதில் உள்ள சுக்கிரன் வசதிகளை வாரி வழங்கும் என்பது ஒரு உண்மையான ஒன்று. அந்த வசதிகள் எல்லாம் அடுத்தவர்களோடு ஒட்டிக்கொண்டு வாழ்கின்ற மாதிரி ஒரு சில இடத்தில் செய்துவிடும். தனக்கு என்று வாழமுடியவில்லை என்று தோன்றும்.

ஒன்பதில் சுக்கிரன் இருப்பவர்கள் குறைந்தது நூறு பேராவது என்னோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள். தற்பொழுதும் தொடர்பில் இருக்கின்றனர் இவர்கள் எல்லாம் என்ன சொல்லுவார்கள் தெரியுமா ? ஒரு லட்சம் கோடிக்கு ஒரு வியாபாரம் இருக்கின்றது இதனை செய்துக்கொடுக்கின்றீர்களா என்பார்கள்.

ஒன்பதில் சுக்கிரன் இருப்பவர்கள் நல்ல மனது நல்ல அறிவு எல்லாவற்றையும் கொடுப்பார் ஆனால் அவர்களுக்கு பல சிக்கல்களை கொடுப்பார். என்ன சிக்கல்களை உங்களுக்கு கொடுப்பார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும் அதனை நான் சொல்லவேண்டியதில்லை.

ஒன்பதில் உள்ள சுக்கிரன் நல்லதையும் கொடுக்கும் கெட்டதையும் கொடுக்கும் என்று சொல்லிவிடுகிறேன். நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: