Followers

Monday, December 18, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் கிரகம் பெரும்பாலும் சுத்தமாக கெட்டு போய்விடாது. அதாவது ஒருவருக்கு உணவை ஏதாவது ஒரு வழியில் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. சுக்கிரன் மட்டும் சரியில்லை என்றால் சாப்பாடு கிடைக்காமல் போய்விடும் அதனால் கொஞ்சம் கருணையும் காட்டிக்கொண்டு தான் இருக்கும்.

பசி பட்டினி நிறைந்த நாடுகளை நாம் பார்த்தால் கூட அந்த நாட்டில் சுக்கிரன் கிரகத்தின் பலன் கிடைக்காமல் இருக்கும். நம்ம நாட்டிலும் இப்படிப்பட்ட விசயங்கள் இருக்கின்றன. ஆன்மீகவாதிகள் அது அனைத்தும் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம்.

சுக்கிரன் கிரகம் நமக்கு எப்பொழுதாவது ஒரு பதினைந்து நாட்களுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் கோச்சாரவழியில் தீமைகளை கொடுக்கும்பொழுது நமக்கும் சாப்பாட்டில் பிரச்சினை வரும்.

சுக்கிரன் கிரகம் நன்றாக இருந்தால் கூட மோசமான காலக்கட்டம் என்பது கோச்சாரத்தில் சரியில்லாமல் செல்லும்பொழுது நமக்கு உடல் ரீதியாக பிரச்சினை கொடுத்து உணவை எடுக்கமுடியாத ஒரு நிலையை ஏற்படுத்திவிடும்.

சுக்கிரன் பரிகாரம் என்பது நவஅம்மன்(சண்டி) யாகம் செய்வது தான் பெரிய பரிகாரம். சுக்கிரனுக்கு என்று தனியாக பரிகாரம் செய்யபோவதில்லை. தனிநபருக்கு செய்துக்கொண்டிருக்கின்ற நவஅம்மன் யாகம் முடிவடையபோகின்றது. நவஅம்மன் பொது யாகம் விரைவில் நடைபெறபோகிறது என்பதால் உடனே ஜாதகத்தையும் கட்டணத்தை அனுப்ப வேண்டுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: