Followers

Friday, December 22, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும் அல்லது சுக்கிரன் கிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்று பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். குரு கிரகம் கூட நன்றாக இல்லாமல் இருந்தால் கூட விட்டுவிடலாம் ஆனால் சுக்கிரன் கிரகம் நன்றாக இருக்கவேண்டும்.

குரு கிரகத்தின் நிழலில் வாழ்பவது என்பது கோடியில் ஒருவருக்கு அமையலாம். குருகிரகம் காட்டும் வழியில் வாழ்வது என்பது இன்றைய காலத்தில் சாத்தியப்படகூடிய ஒரு வழி என்பது கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும்.

சுக்கிரன் என்றால் அது காலத்திற்க்கு தகுந்தார்போல் நம்மை மாற்றிக்கொண்டு வாழும் ஒரு வாழ்க்கை. இதனை அனைத்து மக்களும் வாழமுடியும் என்பதால் சுக்கிரன் காரத்துவத்தில் வாழ்வது எளியது. 

சுக்கிரன் குரு இருவரும் ஜாதகத்தில் கெடும்பாெழுது தான் அவர்களின் வாழ்க்கை துடுப்பு இல்லாத படகுபோல சென்றுக்கொண்டு இருக்கும். ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் அவரின் இஷ்டத்திற்க்கு வாழ்வார்கள்.

சுக்கிரன் கிரகத்தின் அடியில் நாம் வாழ்ந்தாலே போதும் அது உங்களை இந்த வாழ்க்கையும் வாழ வைத்து அடுத்த பிறவி அல்லது இத்தோடு முடியும் வாழ்க்கையும் வாழ வைக்கும். 

நவஅம்மன் பொது யாகத்திற்க்கு ஜாதகத்தை அனுப்புவர்கள் அனுப்பி வைக்கவும். காலதாமதம் வேண்டாம் உடனே அனுப்பி வைக்கவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: