Followers

Tuesday, December 19, 2017

சனிபெயர்ச்சி


வணக்கம்!
         சனிப்பெயர்ச்சி என்பது அதிகளவில் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இருப்பதால் உங்களுக்கு பிரச்சினை வரும்.

சோதிடர்கள் சொல்லும் அளவுக்கு எல்லாம் உங்களுக்கு பிரச்சினை வந்துவிடாது. நீங்கள் உங்களின் உடல் மீது மட்டும் அதிகம் கவனம் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். உடலை காப்பாற்றுவது மட்டும் தான் முதல் கவனமாக இருக்கவேண்டும்.

சனியின் ஆற்றல் கிடைக்காமல் உங்களின் உடல் பாதிப்படைய செய்யும். உங்களின் சாப்பாட்டு விசயத்தில் நீங்கள் அதிகம் கவனம் எடுத்துக்கொண்டு வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் குளியல் செய்து வந்தால் போதும்.

திருநள்ளாறு சென்று அங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவது நல்லது. தீர்த்தத்தில் நீராடாமல் சுவாமி தரிசனம் செய்யவேண்டாம்.

நவஅம்மன்(சண்டி) யாகம் இன்றோடு முடிவடைந்துவிட்டது. பொது நவஅம்மன் யாகத்திற்க்கு ஜாதகம் மற்றும் கட்டணம் செலுத்துபவர்கள் செலுத்தலாம். பொதுவாக செய்யவேண்டிய விசயத்தை தள்ளிபோடகூடாது என்பதால் இதனை உடனே செய்யவேண்டும் என்ற ஆர்வம் காட்டுகிறேன். தனிநபர்கள் தான் இதற்கு அதிகம் ஆர்வம் கொடுக்கின்றனர். பொதுநபர்களின் வேண்டுகோள் என்பதால் செய்யலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: