Followers

Wednesday, December 20, 2017

உறையூர் வெக்காளியம்மன்


வணக்கம்!
         இன்று திருச்சி சென்று வந்தேன். திருச்சியில் மதுரை நண்பர் வந்திருந்தார் அவருக்காக ஒரு கோவில் சென்று வந்த பிறகு எனக்காக உறையூர் வெக்காளியம்மன் கோவில் சென்றோம். 

உறையூர் வெக்காளியம்மன் பனிரெண்டு மணி அபிஷேகம் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று. அம்மனுக்கு அபிஷேகம் செய்வதை பார்க்க இந்த பிறப்பு எடுத்த வந்திருக்கிறோம் என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

உறையூர் வெக்காளியம்மன் கோவில் மூலவர் மட்டும் வெயில் படும்படி இருக்கின்றது. அதற்கு அபிஷேகம் செய்யும்பொழுது நாம் பார்க்கும்பொழுது மிகுந்த பரவசம் நமக்கு ஏற்படும். திருச்சி சென்றால் பனிரெண்டு மணி அபிஷேகத்தை பார்த்துவிட்டு வாருங்கள்.


நமது ஜாதககதம்பத்திற்க்கு கட்டணம் செலுத்தும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களின் அனைத்து கட்டணமும் நீங்கள் நேரிடையாகவே செலுத்துங்கள். பிறர் வழியாக கட்டணத்தை செலுத்தவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு சில கட்டணத்தை செலுத்துவதற்க்காக செலுத்திய நண்பர்கள் அவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு பாதியை மட்டும் செலுத்துகின்றனர். சில காலங்கள் இதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தேன். சம்பந்தப்படுவர்களுக்கு காரியம் நடக்கவில்லை என்று வரும்பொழுது இது தெரியவருகிறது. 

உங்களின் பிரச்சினைக்கு நீங்கள் செலுத்துவது நல்லது. நீங்கள் நியமிக்கப்படும் நபர் உங்களுக்கு எந்த உறவாக இருந்தாலும் சரி அவர்கள் பணம் என்று வரும்பொழுது உங்களுக்கு தெரியாமல் பணம் எடுப்பார்கள். இதனை தவிர்த்துவிட்டு நீங்களே நேரிடையாக பணத்தை செலுத்துங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் கட்டணத்தை செலுத்தினால் நீங்கள் இவ்வளவு பணம் அனுப்பிருக்கிறேன் என்ற விபரத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். பணம் செலுத்தும் அனைவரும் தகவல் கொடுத்துவிட்டால் மிகவும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: