Followers

Tuesday, July 22, 2014

நன்றாக ஒடுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள நிறைய கருத்துக்களை நான் சொல்லி இருக்கிறேன். பல நண்பர்கள் அதனை கடைபிடித்து வருகின்றனர். காயத்ரி மந்திரம் செய்வதற்க்கு முன்பு ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்துவிட்டு செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளேன்.

உங்களின் உடலை பாதுகாக்கவில்லை என்றால் நீங்கள் இந்த பூமியில் நீண்டநாட்கள் வாழமுடியாது. நோய் வந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று பார்த்துக்கொள்வது முட்டாள் தனம். அந்த நோயை வரவிடாமல் உங்களை பாதுக்காத்துக்கொள்வது நல்லது.

உடற்பயிற்சியில் நீங்கள் தினந்தோறும் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் போதும். உங்களின் உடலில் இருக்கும் அத்தனை நோயும் உங்களைவிட்டு ஓடிவிடும். இதனை நான் பல காலங்களாக செய்துக்கொண்டு வருகிறேன். 

வியர்வை வெளியேறும் வரை ஒடுங்கள் போதும். உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. முதலில் உங்களின் உடல் இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கொஞ்ச தூரம் ஓடுங்கள் அதன் பிறகு நடந்து செல்லுங்கள். நாள்கள் செல்ல செல்ல உங்களின் உடல் அதற்கு சம்மதிக்கும்.

நான் நன்றாக உடலுக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு அதன் பிறகு தான் பூஜையில் அமருவேன். அப்படி அமரும்பொழுது நமது சக்தியும் அம்மனின் சக்தியும் மிகப்பெரிய ஆற்றலாக வரும். நமது உடலில் நரம்புகள் எந்தவித தடையும் இன்றி வேலை செய்யும்பொழுது நமது உடலில் தெய்வீகசக்தி இணையும். உங்களின் வாழ்க்கையில் பிரச்சினை என்பது வராது.

இதுவரை செய்யாதவர்கள் இனிமேலாவது செய்ய ஆரம்பியுங்கள். உங்களின் ஆத்மா உங்களின் உடலை நன்றாக விரும்பும். உடலுக்கு உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் உங்களின் உடலில் தங்கியிருக்கும் ஆத்மா உங்களை வெறுக்க ஆரம்பித்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: