வணக்கம்!
செல்வ வளத்திற்க்கு என்று நிறைய பதிவுகளை நான் கொடுத்து இருக்கிறேன். புதிதாக ஒரு விசயத்தைப்பற்றி உங்களுக்கு சொல்லுகிறேன்.
நீங்கள் திருமணமானவர்களாக இருந்தால் உங்களின் மனைவி தான் உங்களுக்கு எல்லாமே என்று மாறிவிடும். உங்களுக்கு நல்லது மற்றும் கெட்டதை தருபவளாக மனைவி இருப்பார்கள். உங்களின் மனைவியை பார்த்தாலே நீங்கள் வெற்றி பெறுவீர்களாக அல்லது தோல்வி பெறுவீர்களாக என்பதை சொல்லிவிடலாம்.
உங்களுக்கு கிடைக்கும் சக்திகளில் பெண்ணாக இருப்பவள் கொடுக்கும் சக்தி என்பது வழிபடும் அம்மனால் கூட உங்களுக்கு கொடுக்கமுடியாது. உங்களின் மனைவி உங்களுக்கு சக்தியை தருகிறாள் என்பதைப்பற்றி நான் பழைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.
உங்களின் மனைவி உங்களுக்கு சக்தி மட்டும் கொடுக்கமட்டும் இல்லை செல்வவளமும் உங்களுக்கு கொடுக்கிறார் என்பதைப்பற்றி தான் சொல்லபோகிறேன்.
பொதுவாக பெண்கள் குங்குமத்தை மட்டும் நெற்றியில் திலகம் அணிவார்கள். நல்ல சந்தனத்தை நெற்றியில் இட்டு அதன் மேல் குங்குமத்தை வைக்க சொல்லுங்கள். உங்களுக்கு செல்வவளம் வரும். சந்தனத்தில் ஜவ்வாது கலந்து நெற்றியில் தினமும் வைத்துக்கொண்டு வரச்சொல்லுங்கள். விரைவில் செல்வவளம் உங்களை தேடி வரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
Ovvoru pennum oru skathi vadivamthan.
If wife's jadaganm plays vital role in achievements of husband, Can husband's jadagam plays a important role in wife's life? Some ladies are achieving very well after marriage. Even though they are intelligent and confident some ladies can't able to do this easily. Thatswhy I am asking.
Post a Comment