Followers

Wednesday, April 1, 2015

இனிய தொடக்கம்


வணக்கம்!
          இன்று முதல் தேதி காலையிலே உங்களுக்கு பதிவை அளித்துவிடவேண்டும் என்று எழுத தொடங்கிவிட்டேன். பல நண்பர்களை சந்திக்கும் பொழுது அவர்கள் கேட்கும் கேள்வி ஏன் சார் பதிவை குறைவாக பதிவிடுகிறீர்கள் என்ற கேள்வி தான் முதலில் வருகிறது.

பதிவு நிறைய எழுதவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நமது பதிவில் இடம் பெறும் கருத்துக்கள் பிற பதிவுகளில் வருகிறது. நெட்டில் இதனை ஒன்றும் செய்யமுடியாது. பல ஊர்களுக்கு நான் இப்பொழுது சென்று வருகிறேன். அவர்களிடம் நேரடியாக பல கருத்துக்களை சொல்லிவிடுகிறேன். பொதுவான கருத்துக்களை பதிவில் தருகிறேன். மிக முக்கியமான கருத்துக்களை மட்டும் நேரில் சந்திக்கும்பொழுது கேட்டுப்பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜாதககதம்பத்தில் நிறைய செய்திகள் சொல்லியுள்ளேன். அதனை படித்து நீங்கள் செய்து வந்தாலே போதுமான ஒன்று. உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக மிக பெரிய அளவில் உயரும். 

இன்று பிரதோஷம் அருகில் உள்ள சிவலாயங்கள் சென்று பிரதோஷ வழிபாட்டிற்க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். பிரதோஷ வழிபாட்டிலும் கலந்துக்கொள்ளுங்கள். உங்களின் வீட்டில் சிவபூஜை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: