Followers

Sunday, November 8, 2015

பண்டிகையும் நைவேத்தியமும்


வணக்கம்!
          தொடர் மழை காரணமாக நெட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. தொடர்ச்சியாக பதிவை தரமுடியவில்லை. முடிந்தளவு முயற்சி செய்து பதிவை தருகிறேன்.

நான் பதிவு எழுதுவதே அந்தந்த நேரத்தில் என்ன இருக்கின்றதோ அதனை வைத்து பதிவை எழுதுவேன். தற்பொழுது தீபாவளி பண்டிகை சீசன் சரி அதில் ஒரு விசயம் நமது தெரியவந்தது அதனைப்பற்றி சொல்லலாம் என்று இப்பதிவை தருகிறேன்.

தீபாவளி என்றாலே இனிப்பு மற்றும் கார வகைகள் இல்லாமல் இருக்காது. தீபாவளிக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் செய்து கடவுளுக்கு படைத்துவிட்டு அதன் பிறகு உண்ணுவார்கள். 

கடவுளுக்கு படைப்பதற்க்கு வீடுகளில் சுவீட்ஸ் தயாரிப்பதே கலைகட்டும். கிராமங்களில் இது பெரிய விமர்சியாகவே நடைபெறும். அனைத்து வீடுகளிலும் இப்படி செய்வதால் தீபாவளி ஒரு பெரிய பண்டிகை என்பது தெரியும்.

தற்பொழுது பல வீடுகளில் சுவீட்ஸ் வகைகளை எல்லாம் கடைகளில் வாங்கிக்கொண்டு அதனை படைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இப்படி செய்வது தவறான ஒன்று. கடவுளுக்கு படைக்க நமது கையில் இருந்து உணவு வகைகள் தயாராகவேண்டும். சோம்பேறியாக இருந்துக்கொண்டு வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தாதீர்கள்.

வெளியில் வாங்கும் உணவு வகைகளை படைக்கும்பொழுது கண்டிப்பாக கடவுள் உங்களுக்கு படி அளக்கமாட்டார். உங்களுக்கு பிரச்சினையை தான் கொடுப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Makkalukku puriya vendum