Followers

Monday, November 9, 2015

உங்களின் பாக்கியஸ்தானத்தை சோதிக்க வழி


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் தான் ஒருவருக்கு பொறுமையையும் தரவேண்டும். ஒருவருக்கு பொறுமையை மட்டும் ஆண்டவன் கொடுத்துவிட்டால் அவன் இந்த பூமியை ஆள்வான்.

நமது ஜாதககதம்பத்தில் தொழில் செய்பவர்களுக்கு என்று ஆன்மீகவழியில் உதவி செய்துக்கொண்டிருக்கிறேன் என்பது நீங்கள் அறிந்த ஒன்று. இதில் வருபவர்களுக்கு கூட நான் சொல்லுவது பொறுமையாக இருங்கள் உங்களுக்கு நிறைய செய்து தருகிறேன் என்பேன். அதில் ஒருவரும் அப்படி இருப்பதில்லை.

பொறுமையாக இருப்பது கடினமான ஒன்று தான் அதே நேரத்தில் இருந்துவிட்டால் பெரிய ஒன்று உங்களை தேடி வரும். பொறுமையாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு சிலர் வில்லங்கம் செய்துக்கொண்டு இருப்பார்கள். அதுவும் தவறான ஒன்று தான். பொறுமை என்று வரும்பொழுது எந்தவித தீமையான குணங்களை கொண்டவையாக அது இருக்ககூடாது.

ஊரில் பல பேர் பொறுமையாக இருப்பார்கள் ஆனால் ஒரு சில நாட்களில் அவர்கள் செய்யும் வேலை மிகப்பெரிய ஆப்பு வைப்பது போல் அமைந்துவிடும். இப்படியும் இருந்தாலும் ஒரு பயலும் நம்மை ஏற்றுக்கொள்ளமாட்டான்.

ஒரு சில நல்ல கிரகங்கள் ஒன்பது வீட்டில் அமைந்து நமக்கு நல்ல பொறுமையை தந்தால் நமது வாழ்க்கை நன்றாக அமையும். ஒரு கெடுதல் கிரகங்கள் அமைந்தால் நமது வாழ்வில் பொறுமையை இழந்துவிட்டு எல்லாம் போய்விட்டது என்று அல்லல்பட்டுக்கொண்டு இருக்கலாம்.

பாெறுமை பாக்கியஸ்தானம் கொடுக்கும் ஒரு அற்புதமான பாக்கியம். நீங்கள் பொறுமையாக எல்லா இடத்திலும் இருக்கமுடிந்தது என்றால் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். பொறுமை இல்லாமல் இருக்கின்றது என்று நினைத்தால் உங்களுக்கு பாக்கியஸ்தானம் பிரச்சினையை கொடுக்கிறது என்று அர்த்தம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

nallur parames said...

Porumaiyai kadaipidippom.

Unknown said...

Happy diwali to ayya and to all