Followers

Friday, February 2, 2018

இராஜகண்திருஷ்டி


வணக்கம்!
          கண்திருஷ்டியைப்பற்றி பார்த்து வருகிறோம். நாம் செய்த ஒரு சாதாரணமான நிகழ்வு நம் மீது கண்திருஷ்டியை ஏற்படுத்தும். பெரிய நிகழ்வாக நாம் செய்தால் அது மிகப்பெரிய திருஷ்டியை ஏற்படுத்திவிடும்.

உங்களின் வீட்டில் ஒரு காதுகுத்து நிகழ்ச்சி வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த காதுகுத்து நிகழ்ச்சி உங்களின் குடும்பத்தினர் உள்ளவர்கள் உறவினர் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களை மட்டும் வைத்து அந்த நிகழ்வை நடத்தினால் அப்பொழுது உங்களுக்கு வெறும் கண்திருஷ்டி மட்டும் ஏற்படுத்தும்.

உங்களின் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சியை ஒரு மாவட்டமே பார்ப்பது போல அந்த நிகழ்ச்சியை நடத்தினால் அப்பொழுது உங்களுக்கு கண்திருஷ்டி என்பது இராஜகண்திருஷ்டி ஏற்பட்டுவிடும். கண்திருஷ்டியை பரிகாரம் செய்து எடுக்கலாம். இராஜகண்திருஷ்டியை அவ்வளவு எளிதாக எடுத்துவிடமுடியாது.

பத்து லட்சத்திற்க்கு நீங்கள் கார் வாங்கினால் அதற்கு கண்திருஷ்டி ஏற்படும். பத்துகோடிக்கு கார் வாங்கினால் உங்களுக்கு இராஜகண்திருஷ்டி ஏற்பட்டுவிடும். இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இராஜகண்திருஷ்டியை நீக்க தான் பெரிய பணக்காரர்கள் எல்லோரும்  சண்டி ஹோமம் செய்கின்றனர். இராஜகண்திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்க்கு நீங்கள் புத்திசாலியாக நடந்துக்கொண்டால் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: