Followers

Wednesday, February 14, 2018

கால விரையம்


வணக்கம்!
          பல வருடங்களாக நான் ஜாதககதம்பத்தில் எழுதிவருகிறேன். பல வருடங்களுக்கு முன் என்னை சந்தித்தவர்கள் பலர் நன்றாகவே தற்பொழுது இருக்கின்றனர். பலரின் வாழ்வில் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றது.

ஒரு சிலர் மட்டும் நன்றாக இல்லை என்பதை மட்டும் வெளிப்படையாகவே சொல்லலாம். அதற்கு காரணம் நான் மட்டும் இல்லை அவர்களின் தவறும் இதில் இருக்கின்றது. நம்மை சந்தித்தது அவர்கள் தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையானதை சரியாக பின்பற்றவில்லை என்று சொல்லலாம்.

ஒரு சிலர் நம்மை சந்தித்துவிட்டு பிறரின் ஆலோசனை கேட்டும் வீணாகபோனவர்களாகவும் இருக்கின்றனர். நமது அம்மனை பொறுத்தவரை பிறர் மீது நம்பிக்கை வைத்தால் அந்த ஆளை கண்டுக்கொள்ளவே கொள்ளாது. 

பலரை நான் பல இடத்திற்க்கு சென்று கோவிலை தரிசனம் செய்ய சொல்லிருக்கிறேன். அவர் அவர்களின் குடும்ப குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு எல்லாம் செல்ல சொல்லுகிறேன். பிறர் ஆன்மீகத்தில் இருப்பவர்களிடம் சென்று அவர்களின் வழியை பின்பற்றினால் கண்டிப்பாக உங்களுக்கு எதுவும் என்னால் நடக்காது.

பலர் வயதை தொலைத்துவிட்டு அப்படியே இருக்கின்றனர். எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றனர். பணம் யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் ஆனால் அதனை சரியான வயதில் சம்பாதிக்கவேண்டும். சரியான வயதில் அதனை பெறவில்லை என்றால் வாழ்க்கை முழுவதுமே வீண்.

இதுவரை எதுவும் நடக்கவில்லை என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்காமல் எதனையாவது பெறலாம் அதனை வைத்துக்கொண்டு ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கலாம் என்று உங்களின் ஜாதகத்தை அனுப்பி சரியான ஒரு ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். வயதை வீண் செய்யவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Krish said...

Sir

I am in Chennai. How to send my Jadagam to you?. Kindly share the details/link if already exists.



Thanks
A.Kannan

rajeshsubbu said...

வணக்கம்
http://astrovanakam.blogspot.in/2012/05/blog-post_24.html

இந்த லிங்கில் இருக்கின்றது. கட்டண சோதிட சேவையை கிளிக் செய்தால் விபரம் தெரியவரும்.
நன்றி