Followers

Saturday, February 24, 2018

நவஅம்மன் பொது யாகம்


ணக்கம்!
          நவஅம்மன் யாகத்திற்க்கு என்று ஜனவரி மாதத்தில் ஒரு காணிக்கை எனக்கு வந்தது. அதனை வைத்து பொதுவாக நடத்தவேண்டும் என்ற ஒரு எண்ணம் அப்பொழுதே உருவானது. அந்த நேரத்தில் நாம் யாகம் முடிந்தவுடன் ஆரம்பிக்க கூடாது என்று நான் முடிவு எடுத்து இருந்தேன்.

அக்னியில் தொடர்ச்சியாக உட்காரவும் முடியாது. ஒன்பது நாட்கள் அம்மனின் வேகத்திற்க்கு தொடர்ச்சியாக என்னால் ஈடுக்கொடுக்கமுடியாது என்பதால் அதனை தள்ளி வைத்து இருந்தேன்.

வருகின்ற மார்ச் மாதத்தில் அம்மன் பூஜை முடிந்த பிறகு நவஅம்மன் பொது யாகம் நடைபெறும். நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு என்று அனைவரும் கலந்துக்கொள்ளலாம். அனைவரும் தங்களின் பெயர் நட்சத்திரம் போன்றவற்றை எனக்கு அனுப்பி வைக்கலாம்.

கடைசியாக நடைபெற்ற நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு பலர் கலந்துக்கொள்ள இயலவில்லை என்று சொல்லிருந்தனர். அதற்க்காக முன்கூட்டியே இந்த தகவலை தெரிவிக்கிறேன். மார்ச் மாதம் அம்மன் பூஜை நடந்தபிறகு நடைபெறும்.

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கு காணிக்கை செலுத்துபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் அதோடு தற்பொழுது இருந்தே நீங்கள் திட்டமிடலாம் என்பதால் முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன். கடைசியாக நடைபெற்ற பொதுயாகத்தில் கலந்துக்கொண்டவர்களும் இதில் கலந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: