Followers

Wednesday, February 28, 2018

ஜாதக அனுபவம்


ணக்கம்!
         ஒருவருடைய ஜாதகத்தில் அதிகபட்சம் கிரகங்கள் பாதிக்கப்பட்டால் அவருக்கு நடப்பது எதுவும் நல்லதாகவே இருக்காது. அவர்கள் எடுக்கும் எந்த ஒரு காரியமும் ஒரு தடவையில் வெற்றிபெறாது.

ஜாதகத்தில் அதிகப்பட்ச கிரகங்கள் கெடுகின்றது என்றால் எல்லா கிரகங்களும் எக்குதப்பாக அமையும். நல்லது செய்யக்கூடிய கிரகங்கள் நீசமாகிவிடும் அல்லது எதிரிகளின் வீட்டில் அமையும் மறைவு ஸ்தானத்திலும் ஏறிவிடும்.

இவர்கள் ஒரு வேலைக்கு செல்கின்றார்கள் என்றாலும் அந்த கம்பெனி திவாலாகிவிடும். இவர்கள் ஒரு வேலைக்கு சென்ற பிறகு படிப்படியாக கம்பெனி நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இவர்களுக்கு சம்பள பாக்கி வைத்துவிடுவார்கள்.

இப்படி எல்லாம் இருக்கின்றதா என்று நினைக்கலாம். இப்படி பலர் இருக்கின்றனர். நிறைய பேர்களை நான் சந்தித்து இருக்கிறேன். இவர்களிடம் இதனைப்பற்றி வெளியில் காட்டிக்கொள்ளாதீர்கள் என்று சொல்லுவது உண்டு.

அதிகப்பட்சம் கிரகங்கள் சரியில்லாதவர்களுக்கு திருமணமும் கிட்டதட்ட நாற்பது வயதை தொடும் நேரத்தில் மிகுந்த போராட்டத்திற்க்கு பிறகு நடக்கும். ஒரு சிலர் திருமணம் நடக்காமாலே இருக்கின்றனர். 

நமக்கு இப்படி விதியை இறைவன் எழுதிவிட்டேன் என்று எண்ணி இருந்துவிடாமல் நிறைய கோவில்களை தரிசனம் செய்து புண்ணியநதியில் எல்லாம் நீராடிவிட்டு இருந்தால் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: