Followers

Monday, February 26, 2018

மனநோய்க்கு தீர்வு


வணக்கம்!
          அனைவருக்கும் மனரீதியாக பிரச்சினை இருக்கும். மனரீதியாக பிரச்சினை கொஞ்சம் அதிகமாகவே ஆன்மீகவாதிக்கும் சோதிடர்களுக்கும் இருக்கும். இது அவ்வப்பொழுது உடலில் இருந்து வெளிப்பட்டு வரும்.

எப்படி இதனை வெளிப்படுத்துகிறது என்றால் நரம்பு அதிகமாக துடிக்கும். இந்த துடிப்பு உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் இருக்கலாம் அல்லது உடலில் உள்ள உறுப்புகளில் எல்லாம் கூட இது நடக்கும். சாதாரணமான மனிதர்களுக்கு கண் சிமிட்டும் தன்னையறியாமல் இது நடக்கலாம்.

சோதிடர்களுக்கு எப்படி இது வருகின்றது என்றால் அடுத்தவர்களின் பிரச்சினையை கேட்டுக்கொண்டே இருப்பதால் அது அப்படியே ஆழ்மனத்திற்க்கு சென்று அது கொஞ்ச நாளில் வெளிப்பட ஆரம்பிக்கும். 

இந்த மனநோய்க்கு பல பெயர்கள் ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். எது எப்படி இருந்தாலும் இது மனநோய். இதனை போக்கிக்கொள்ள வேண்டும். இதனை போக்கவில்லை என்றால் நீங்கள் தற்கொலை செய்துக்கொள்ள சென்றுவிடுவீர்கள்.

பல சோதிடர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் கூட தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த மனநோயை போக்கிக்கொண்டுவிட்டால் நல்லது. சாதாரணமானவர்களுக்கும் இது வரலாம் சோதிடர்களுக்கு இது அதிகமாகவே வருகின்றது.

எனக்கும் இந்த மனநோய் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதனை தற்சமயம் போக்கிக்கொண்டுவிட்டேன். இதற்கு நான் எனது ஆலோசகர் ஒருவரிடம் இதனைப்பற்றி கேட்டபொழுது அவர் இதற்கு தீர்வு சொல்லமாட்டேன் என்றார்.

இதற்கு நானே கண்டுபிடித்து போக்கிக்கொண்டேன். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு இதனை போக்கிக்கொள்ளலாம். உங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இது வந்திருக்கலாம் அல்லது வரலாம். 

ஒரு சிலர் தியானம் செய்தும் போக்கிக்கொள்கின்றனர். உங்களுக்கு எப்படி வசதியோ அது போல செய்துக்கொண்டு இதனை போக்கிக்கொள்ளவேண்டும். எது செய்தாலும் முன்கூட்டியே செய்துவிடுவது நல்லது. உடனே செய்துக்கொண்டு விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: