Followers

Monday, February 26, 2018

மக்கள் உருவாக்கும் பூமியின் மனநிலை


வணக்கம்!
          நம்ம ஆளுங்க என்ன செய்வார்கள் என்றால் சம்பந்தமே இல்லாத ஒரு விசயத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை உலகம் முழுவதும் பரப்பி விடுவார்கள். நேற்று ஒரு நடிகை இறந்தர்க்கு அனைவரையும் சோகத்தில் மாற்றினார்கள்.

ஒவ்வொருவரின் வீட்டிலும் துக்கம் நடந்தது போல மாற்றிவிட்டனர். இந்த மனநிலை உருவாக்கினால் அந்த மனநிலையிலேயே நாடு முழுவதும் பரப்பிவிடுவார்கள். சாதாரணமான மக்கள் எதனை செய்தாலும் ஒரு வித சோகம் அந்த நேரத்தில் பரவும்.

மக்கள் மனதில் மகிழ்ச்சி இருந்தால் அது சூட்சமாக அனைத்து இடத்திற்க்கும் மகிழ்ச்சி பரவும். மக்கள் மனதில் துக்கம் இருந்தால் அதுவும் பரவும். மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதை பொறுத்து தான் நாம் வழிபடும் தெய்வங்களும் நமக்கு அருளை அந்த நேரத்தில் வழங்கும்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கின்றது அதனை எல்லாம் விட்டுவிட்டு நடிகை இறப்பிற்க்கு ஜானதிபதியில் இருந்து பிரதமர் வரை இரங்கல் செய்தியை சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். நாடு எப்படி இருக்கின்றது என்பதை இதனை பார்த்தே தெரிந்துக்கொள்ளலாம்.

துக்கம் நடக்காமல் இருக்காது அதற்க்காக அதனையே பிடித்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. இதனை சொல்லுவதற்க்கு காரணம் உங்களால் இந்த பூமியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் துக்கமாக வைத்திருப்பதும் உங்களின் மனநிலையும் ஒரு காரணமாக இருக்கின்றது என்பதற்க்காக சொன்னேன். நன்றாக உற்று நோக்கினால் இது உங்களுக்கு புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: