Followers

Wednesday, January 9, 2019

பழனி பாத யாத்திரை


வணக்கம்!
          இன்று பழனி பாத யாத்திரை பயணத்திற்க்கு செல்கிறேன். பழனி பாத யாத்திரை என்று உங்களிடம் சொன்ன பிறகு கஷ்டம் என்பது குறைவாக வரவில்லை நிறையவே வந்தது என்று சொல்லலாம். எந்த கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை அதில் இருந்து மீண்டு வருவது தான் ஆன்மீகத்தின் வேலை. கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்.

அம்மன் பூஜையை முடிந்தளவுக்கு பொங்கலுக்கு முன்பே நடத்த திட்டமிடுகிறேன் முடியவில்லை என்றால் பொங்கலுக்கு பிறகு நடத்தப்படும். பழனி பாத யாத்திரைக்கு என்னோடு ஜாதக கதம்பத்தின் வழியாக நண்பர்கள் வருகின்றார்கள். 

என்னோடு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைத்தேன் வருகின்றார்கள். அனைவரையும் அழைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு சில காரணங்களுக்காக இந்த முறை வேண்டாம் என்று விட்டுவிட்டேன். 

பலர் வேலையில் இருப்பதால் அவர்களை நான் கூப்பிடவில்லை. என்னை கூப்பிடவில்லை என்று யாரும் கோபம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னோடு தான் வரவேண்டும் என்பதில்லை நீங்களாவே கூட சென்று வாருங்கள்.

என்னோடு ஜெராக்ஸ் போலவே நீங்கள் செயல்படுவீர்கள். ஒத்த மனம் கொண்டவர்கள் போலவே பலர் இருக்கின்றீர்கள். நான் என்ன செய்துக்கொண்டு இருக்கிறேன் என்பதை காட்டினால் உங்களுக்கு அது பயன்படும் என்பதற்க்காக இதனை பதிவில் சொல்லுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: