Followers

Friday, January 4, 2019

நவ அம்மன் (சண்டி) யாகம்


வணக்கம்!
          நவ அம்மன் (சண்டி) யாகம் பொங்கலுக்கு பிறகு தான் நடத்தப்படுகின்றது. அம்மன் பூஜையை முடித்துவிட்டு நவஅம்மன் (சண்டி) யாகம் நடத்தப்படும். ஒரு சில காரணங்களுக்காக தள்ளி நடத்தப்படுகின்றது. சண்டி யாகத்திற்க்கு பலர் தங்களைப்பற்றிய விபரத்தை தெரிவித்து வருகின்றனர். அனைவரும் சண்டி யாகத்தில் இணைய அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தற்பொழுது ஆன்மீக காலம் என்றே சொல்லலாம். இந்த காலத்தில் பெரும்பாலும் அனைவரும் கோவில் கோவில் என்று தான் இருப்பார்கள். பெரும்பாலும் கோவிலுக்கு செல்வதால் மனிதர்கள் பெரியதாக தங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லமாட்டார்கள்.

ஆன்மீகத்தில் இணைத்துக்கொள்வதால் அனைத்தையும் தாங்களே சரி செய்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆன்மீக பயணத்தை அப்படியே செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். 

காலச்சுழற்சி என்பது ஒரு சில நாட்களிலேயே அனைவரும் மறுபடியும் மாற்றத்தை நோக்கி சென்றுவிடுவார்கள். எப்படி என்றால் தை பூசத்திற்க்கு பிறகு கோவில் பக்கம் அதிகம் செல்லமாட்டார்கள். பிரச்சினையை கண்டு பயப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

தினமும் கோவில் கோவிலாக சென்றுக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும். பிரச்சினை என்பது வந்தாலும் நீங்களாகவே அதனை வென்றுவிடும் மனநிலையில் இருப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: