Followers

Wednesday, January 30, 2019

அமாவாசை


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நீண்ட பயணம் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது. நிறைய பதிவுகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் அதனை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன். தற்பொழுது ஒரு கடினமான முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன் அது கை கூடும் நேரத்தில் உங்களிடம் சொல்லுகிறேன். விரைவில் அம்மன் அருளால் அது நடக்கும்.

அமாவாசை என்பது நம்ம ஆட்கள் தான் அதனை பெரிதும் பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது அது பிறமதங்களிலும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அமாவாசை முன்னோர்களின் ஆசியை வழங்குவதற்க்கு என்று ஏற்ற நாளாக வைத்திருக்கின்றனர்.

அமாவாசை அன்று கிரகங்கள் பலன் குறைவாக இருக்கும். அமாவாசை அன்று கிரகங்கள் பலன் குறைவதற்க்கு நமது முன்னோர்கள் வந்து செல்வதற்க்கு ஒரு ஏற்ற நாளாகவே அது இருக்கின்றது. அதனை தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றனர்.

நமது முன்னோர்கள் ஒவ்வொரு அமாவாசையும் நம்மை நாடி வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடும் நாம் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை போன்ற விஷேசமான அமாவாசையை தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றனர். 

விஷேசமான அமாவாசை நாட்களில் நம்மால் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை செய்யவேண்டும். அமாவாசை அன்று செய்யும் விரதம் மற்றும் திதி கொடுப்பதை செய்யலாம். ஏதோ ஒரு ஆறு குளம் மற்றும் கடலில் நீராடிவிட்டு வாருங்கள். இதுவே மிகப்பெரியளவில் உங்களுக்கு மாற்றத்தை கொண்டு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: