Followers

Monday, January 21, 2019

தை பூசம்


வணக்கம்!
          இன்று தைபூசம். வருடம் தோறும் தைபூசத்திற்க்கு ஏதாவது ஒரு பரிகாரம் செய்ய சொல்லி அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துங்கள் என்று சொல்லுவது உண்டு. இந்த வருடம் வழிபாடு எதுவும் சொல்லவில்லை.

இன்றைய வருடம் நீங்கள் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். தை பூசத்திற்க்கு அன்னதானம் மிகவும் புகழ்பெற்றது. உங்களால் முடிந்தால் யாருக்காவது அன்னதானம் செய்யுங்கள்.

எப்பொழுதும் தை பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விஷேச நாட்களில் பழனி சென்று தரிசனம் செய்துவிட்டு வருவது உண்டு. இந்த வருடம் நான் பாதயாத்திரை சென்றுவந்துவிட்டேன். தை பூசம் முடிந்தாலும் பழனிக்கு சென்று வந்துவிடுங்கள். 

ஒருவர் மிகப்பெரிய அளவில் வரவேண்டும் என்றால் அதற்கு முருகனின் அருள் அவர்க்கு கிடைக்கவேண்டும். இதனை நாம் சந்திக்கும் பலரிடம் சொல்லுவது உண்டு அதற்க்கு தகுந்தமாதிரியே நீங்களும் முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். இந்த மாதிரியான விஷேச நாட்களிலும் சென்று வாருங்கள்.

தை பூசம் முடிந்தும் பலர் தங்களின் வேண்டுதலுக்காக பழனி சென்று வருவார்கள். நீங்களும் முடிந்தவரை பழனிக்கு சென்று வாருங்கள். எனக்கு தெரிந்தவரை கேரளா மக்கள் அனைவரும் தைபூசம் முடிந்தபிறகு தான் பழனிக்கு சென்றுவருவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: