Followers

Saturday, January 5, 2019

பழனி பாதயாத்திரை


வணக்கம்!
         பொங்கலுக்கு முன்பே அம்மன் பூஜை நடத்தப்படும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்துங்கள்.

அடுத்தவாரத்தில் பழனி பாதயாத்திரை செல்கிறேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்கிறேன். பாதயாத்திரை மற்றும் பல பூஜைகளால் தான் நவஅம்மன் யாகம் தள்ளி சென்றது. இன்றும் அமாவாசை பூஜை நன்றாக செய்யப்பட்டது.

நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் அவ்வப்பொழுது உங்களால் முடிந்தளவுக்கு பாதயாத்திரை மேற்க்கொள்ளுங்கள். உங்களின் ஆன்மா நல்ல நிலையில் இருப்பதற்க்கும் பல விதமான நன்மைகள் இவ்வாழ்க்கையிலும் மறுவாழ்விலும் நடைபெறுவதற்க்கு இப்படிப்பட்ட யாத்திரை அவசியம் மேற்க்கொள்ளவேண்டும்.

பல நண்பர்கள் இதனை செய்துக்கொண்டு வருகின்றீர்கள். உங்களுக்கு எப்பொழுது எல்லாம் நேரம் இருக்கும்பொழுது எல்லாம் யாத்திரையை மேற்க்கொள்ளலாம். இந்த பிறவியை நன்றாக பயன்படுத்திக்கொள்ள இப்படிப்பட்ட யாத்திரையை செய்யவேண்டும்.

பழனிக்கு மட்டும் அல்ல உங்களுக்கு மனதில் தோன்றும் எந்த கோவிலுக்கும் யாத்திரை மேற்க்கொள்ளலாம். ஒவ்வொரு யாத்திரையிலும் உங்களின் ஆன்மா பலப்படுவதை நீங்களே உணரமுடியும். பாத யாத்திரையை முடித்துக்கொண்டு வந்து பதிவில் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். கடந்தகாலத்தை சொல்லுவதில் பயன் இல்லை என்பதால் தற்பொழுதே அறிவித்துவிட்டேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: