Followers

Wednesday, January 2, 2019

நாடி


வணக்கம்!
          திருமணப்பொருத்தம் பார்க்கும்பொழுது நாடிப்பொருத்தம் என்ற ஒன்றைப்பற்றி சொல்லுவார்கள். பொருத்தம் பார்ப்பதில் நாடிப்பொருத்தமும் உண்டு. நாடி என்றால் நமது உடலில் ஓடுகின்ற நாடி எந்த நாடி என்பதை காட்டுவதாகும். மூன்று நாடியும் ஓடும் இதில் எந்த நாடி அதிகமான தாக்கம் உங்களின் உடலில் இருக்கின்றது என்று பார்ப்பார்கள். 

ஒரு ஆணின் நாடியும் பெண்ணின் நாடியும் வெவ்வாறாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். வெவ்வாறாக இருந்தால் நாடிப்பொருத்தம் இருக்கும் என்று சொல்லுவார்கள். ஒரு ஆணுக்கு வாதநாடியாக வந்தால் பெண்ணிற்க்கும் வாதநாடியாக வரக்கூடாது என்பார்கள் வேறு நாடியாக வந்தால் பொருத்தம் இருக்கும்.

நாடியை வைத்து தான் மருத்துவமும் பார்ப்பார்கள். எனக்கு தெரிந்தவரை இது ஆயுர்வேதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். இதனை கிராமபுறங்களில் நன்றாக பார்ப்பார்கள். வயதான மனிதர்கள் நாடியை பார்த்தே இவர் இத்தனை நாள் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லுவார்கள்.

இன்றும் எங்கள் பகுதியில் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இருக்கின்றனர். பத்து வருடத்திற்க்கு முன்பு இதனை நன்றாக பார்த்து சொல்லிருக்கின்றார்கள். இப்பொழுது உள்ள தலைமுறைக்கு நாடி அந்தளவுக்கு பார்க்க தெரியவில்லை என்று தோன்றுகின்றது.

நாடிப்பொருத்தம் திருமணத்திற்க்கு மட்டும் இல்லை நமது உடல்நிலை எப்படி இருக்கும். எப்படிப்பட்ட நோய் எல்லாம் வரும் என்பதை தெரிந்துக்கொண்டு அதன்படி நடப்பதற்க்கு தான் இதனை எல்லாம் சொல்லிருக்கின்றனர். உங்களின் ஜாதகத்தை எடுத்து எந்த நாடி உங்களுக்கு அதிகமாக இருக்கின்றது என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: