Followers

Friday, January 4, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
           நாளை அமாவாசை. நமது ஜாதக கதம்பம் சார்பாக சிறப்பான ஒரு பூஜை செய்யப்படுகின்றது. பெரும்பாலும் இந்த பூஜைகள் வெளியில் சொல்லப்பட மாட்டாது. அதோடு புகைப்படங்களும் வெளியில் காட்டப்படமாட்டாது. உங்களுக்கு அவசியமான வேண்டுதல் இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். 

நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை கற்று தருவீர்களா அல்லது யாராவது இந்த வித்தையை கற்று தரும் நபர்கள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் என்று கேட்டார்.

என்னுடைய வேலை பூஜைகள் செய்வது. உங்களோடு என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வது. பெரும்பாலும் நான் வழிபாட்டை சொல்லிக்கொடுப்பது உண்டு. அதோடு என்னுடைய வேலையை முடித்துக்கொள்வேன்.

பெரும்பாலான ஆன்மீக பயிற்சிகள் கூட பெரியளவில் எல்லாம் இருக்காது. நான் சொல்லி தந்த விசயங்கள் கூட அப்படிப்பட்ட ஒன்றாக தான் இருக்கும். ஒரு சாதாரணமான மனிதனுக்குள்ள பயிற்சி தான் அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து இருக்கிறேன்.

கூடு விட்டு கூடு பாயும் விசயத்தை எல்லாம் கற்பதை விட ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படையான ஆன்மீக விசயங்களை நீங்கள் கற்றாலே போதும் அதனை தொடர்ச்சியாக செய்து வந்தாலே போதுமானது என்பதால் இதனை சொல்லிக்கொடுக்கிறேன் என்று யாராவது சொன்னால் அதனை எல்லாம் நீங்கள் தேடிச்செல்ல வேண்டியதில்லை. உங்களிடம் இருக்கும் ஆன்மீகத்தை தொடர்ச்சியாக செய்து வாருங்கள் அது போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: