Followers

Friday, January 25, 2019

சோதிடத்தில் மறைவு வீட்டால் லாபம்


வணக்கம்!
          விரைய வீடான பனிரெண்டாவது வீடு தான் நாம் செய்யும் யாத்திரைகளை காட்டக்கூடிய ஒரு இடமும். நாம் யாத்திரை சென்றால் நமக்கு நல்லது நடக்கும். இன்றைக்கு நாம் செல்லும் யாத்திரை என்பது ஒரு வகையான செலவாக இருந்தாலும் அது பிற்காலத்தில் நமக்கு நன்மையை செய்யும் என்பதற்க்காக தான் யாத்திரையை விரைய வீட்டில் வைத்திருக்கின்றார்கள்.

நான் உங்களுக்கு போதித்தது அனைத்தும் நானே பெரும்பாலும் செய்து அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது உண்டு. யாத்திரையும் நீங்கள் செய்யவேண்டும் என்பதற்க்காக தான் இதனை சொல்லுகிறேன். யாத்திரை என்ற செலவை செய்தால் கண்டிப்பாக எதிர்காலத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

எங்களுடைய பெரும்பாலான பரிகாரத்திற்க்கு நீங்கள் முதலில் செலவு செய்வது போல தான் வைத்திருக்கின்றோம். என்னுடைய குருவே என்னிடம் சொல்லிருக்கின்றார். முதலில் வருபவர்களிடம் பணத்தை வாங்கு அதன் பிறகு பரிகாரத்தை செய் என்பார். எல்லாம் இப்படிப்பட்ட நோக்கத்திற்க்காக மட்டுமே அதனை செய்ய சொல்லிருக்கிறார்.

முதலில் நீங்கள் செலவு என்பது ஆன்மீக வழியாக யாத்திரை செய்வதை செய்வதை கூட செய்துவிட்டு அதன்பிறகு ஒரு நல்லதை ஆரம்பிக்கலாம். மறைவு ஸ்தானம் உங்களை கைவிடாது என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

நாம் எந்தவிதத்தில் செலவு செய்யலாம் என்பதை முடிவு எடுத்துவிட்டு அதன்பிறகு சம்பாதிக்க திட்டமிட்டால் கண்டிப்பாக உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லது நடக்க ஆரம்பித்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: