Followers

Thursday, January 24, 2019

தீயகிரகங்கள் பரிகாரம்


வணக்கம்!
          கிரகபலன்கள் தீயவை அதிகமாக செயல்படும்பொழுது நாம் அதிகமாக கோவில் குளங்களை நாடிச்செல்லவேண்டும் அந்த காலக்கட்டத்தில் நல்ல விசயங்களை அதிகமாக எடுத்துக்கொண்டு செய்யகூடாது.

தீயகிரகங்களின் காலக்கட்டத்தில் நல்ல விசயங்கள் என்று பார்த்தால் ஏதாவது சுபநிகழ்வுகள் நடைபெறுவது போல உங்களின் வீட்டில் செய்துவிடவேண்டும். இதனை நீங்கள் செய்தால் தீயநிகழ்வுகள் நடக்காமல் செய்யலாம்.

நம்முடைய திட்டம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் உங்களுக்கு நடக்கும் தீயவைகளை கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நீங்கள் குலதெய்வ வழிபாடு அல்லது இஷ்டதெய்வ வழிபாடு செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த அறிவு கிடைக்கும்.

ஏதாே ஒரு தெய்வத்தை விடாமல் வழிபட்டு வரும்பொழுது மட்டுமே இப்படிப்பட்ட சிந்தனை உங்களுக்கு அந்த தெய்வம் கொடுக்கும். தீயகிரகங்கள் முதலில் சிதைப்பது உங்களின் சிந்தனையை தான் சிதைக்கும்.சிந்தனையை கெடுத்தால் உங்களால் நன்றாக செயல்படமுடியாது.

நல்ல சிந்தனையை உருவாக்குவதில் உங்களின் தெய்வம் உங்களுக்கு நல்ல சிந்தனையை கொடுக்கும். இதனை வைத்து நீங்கள் தீயகிரகங்களின் காலக்கட்டத்தில் நன்றாக செயல்படமுடியும். புத்தி உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று சொல்லுவார்கள் அல்லவா. நல்ல புத்தியை தீயகிரகங்களின் காலக்கட்டத்தில் உங்களின் தெய்வம் கொடுத்தால் கண்டிப்பாக நீங்கள் பிழைத்துக்கொள்வீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: