Followers

Friday, January 11, 2019

ஆன்மீகம்


வணக்கம்!
          ஒருவருக்கு கெடுதல் காலக்கட்டமாக வரும் காலக்கட்டங்களில் ஒருவர் என்ன செய்யலாம் என்றால் ஆன்மீக பணிகளை அதிகமாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். ஆன்மீக வழியில் பணிகள் செய்வது எளிதான காரியம் இல்லை சாதாரணமான விசயங்களை விட அதிகமாக இதில் தடைகள் வரும்.

ஆன்மீக பணியை எடுத்து செய்யும்பொழுது உங்களுடைய பல தோஷங்கள் மற்றும் கர்மா முழுமையாக விடுதலை அடைந்துவிடும். இதுவும் கஷ்டக்காலங்களில் நீங்கள் எடுத்து செய்தால் அது பல ஜென்மங்களாக வந்த தோஷம் நிவர்த்தியாகிவிடும்.

ஆன்மீகம் எல்லாம் ஒன்பதாவது வீடாக மட்டுமே வரும் பூர்வஜென்மம் என்பது ஐந்தாவது வீடாக வருகின்றது எப்படி அனைத்தும் போகும் என்று கேட்கலாம். ஆன்மீகம் என்பது நமக்கு கிடைத்த ஒரு பெரிய வழிகாட்டி அது சோதிடத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள தோஷத்தை போக்கும் தன்மை உடையது.

பல ஜென்மங்களாக தொடரும் பல விசயங்களில் முதன்மையான ஒன்று நீங்கள் செய்யும் ஆன்மீகம். ஆன்மீக வழியில் செய்யும் முயற்சிகள் எல்லாம் உங்களுக்கு பல ஜென்மங்களாக தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: