Followers

Thursday, July 18, 2019

தீர்வுகள் பகுதி 5


வணக்கம்!
          ஒரு ஜாதகத்தில் தோஷங்கள் இருந்து அந்த ஜாதகர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றால் அவர் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுகின்றார்களா என்று பார்க்கவேண்டும் அப்படி இல்லை என்றால் ஒரு காலக்கட்டத்திற்க்கு பிறகு அவர் முன்னேற்றம் காண ஆரம்பித்தால் அந்த தோஷத்தால் அவர் விழித்துக் கொண்டு விட்டார் என்று அர்த்தம்.

முப்பந்தைந்து வயது வரை கஷ்டப்படலாம் கொஞ்சம் அதிகமானால் நாற்பது வயது வரை கஷ்டப்படலாம் இது ஒரு சாதாரணமான விசயமாக எடுத்துக்கொள்ளலாம். நாற்பது வயதிற்க்கு மேல் அவர் முன்னேற்றம் காண ஆரம்பித்துவிட்டால் அவர் மேலே ஏறிக்கொண்டே செல்வார்.

நாற்பது வயதிற்க்கும் மேலும் கஷ்டப்பட்டால் அது பெரிய தோஷமாகவே இருக்கின்றது என்று தான் பொருள் கொள்ளவேண்டும். அவர் நிறைய விடை தேட ஆரம்பிக்கவேண்டும். அவரை இதற்கு விடை காண செல்லவேண்டும்.

முப்பது வயது வரை பாருங்கள் அவர் ஒன்றும் வளர்ச்சியை நோக்கி செல்லவில்லை என்றால் அவரை உடனே திருமணம் செய்துக்கொள்ளலாம். ஏன் என்றால் ஒரு சிலருக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால் திருமணம் செய்து வைத்தால் அவர்க்கு ஒரு வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும்.

எதுவுமே நடக்காமல் இருப்பதற்க்கு திருமணத்தை நடத்தி வைத்தாலும் வருகின்றவர்களின் ஜாதகத்தால் அவரின் வாழ்க்கையில் மாறுதல் நடைபெறலாம் அல்லவா. நிச்சயமாக மாறுதல் என்பது நடக்கும்.

திருமணம் நடத்திய பிறகு பெரும்பாலும் இப்படிப்பட்டவர்கள் நன்றாக வாழ்க்கின்றனர். அவர்களின் துணையின் ஜாதகத்தால் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: