Followers

Sunday, July 28, 2019

தீர்வுகள் பகுதி 8


வணக்கம்!
          அனைவரும் என்ன நினைப்பார்கள் என்ன சொல்லுவார்கள் நான் நன்றாக இருக்கவேண்டும். சுகமாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். உங்களைப்பற்றி தெரிந்தவர்கள் உங்களை முதலில் பார்க்கும்பொழுது என்ன கேட்பார்கள் நலமாக இருக்கின்றீர்களா இதனை தான் கேட்பார்கள்.

உங்களின் ஜாதகத்தில் சுகம் என்று வந்தாலே அது நான்காவது வீட்டை குறிக்கும். நான்காவது வீடு நன்றாக இருந்தால் அவர் சுகமாக இருக்கின்றார் என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். நான்காவது வீடு நன்றாக இருக்கும் வரை தான் அவர் சுகமாக இருப்பார்.

முதலில் லக்கனாதிபதியை நன்றாக இருந்தால் தானே சுகமாக இருக்கமுடியும் நீங்கள் நான்காவது வீட்டை சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். நான்காவது வீடு தான் மிக மிக முக்கியம் அதன்பிறகு நீங்கள் எந்த வீட்டையும் பார்த்துக்கொள்ளலாம்.

நான்காவது வீடு அம்மாவைப்பற்றி காட்டக்கூடிய வீடு. காலபுருஷப்படி நான்காவது வீடாக கடக இராசியை வைத்திருக்கின்றார்கள். கடக இராசி அதிபதி சந்திரன். சந்திரன் நன்றாக இருந்தால் அம்மா நன்றாக இருப்பார்கள்.

ஒருவர் முன்ஜென்மத்தில் அம்மாவை தவறாக நடத்திருந்தால் அல்லது அம்மாவை கவனிக்காமல் விட்டு இருந்தால் அவர்களுக்கு ஈசானியம் நன்றாக அமையாது என்று வாஸ்துவில் சொல்லிருப்பார்கள். ஈசானிய மூலை உங்களின் வீட்டில் நன்றாக அமைந்துவிட்டால் நீங்கள் அனைத்து சுகத்தையும் அனுபவித்துவிடமுடியும். ஒன்றோடு ஒன்று தொடர்பை பற்றி சொல்லுவதற்க்கு தான் மேலே சொன்ன சோதிட தகவலை தந்தேன். 

ஈசானியம் வழியாக தான் உங்களுக்கு சக்தி கிடைக்கும். தெய்வத்தின் அருள் கிடைக்கும். தெய்வத்தின் அருள் கிடைத்துவிட்டால் உங்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷமும் போய்விடும் நீங்களும் நன்றாக வாழ்வீர்கள்.உங்களுக்கு நாம் கொடுக்கும் தீர்வு நீங்கள் போன ஜென்மத்தில் உள்ள குறைகளை களைய வேண்டாம். இந்த ஜென்மத்தில் உங்களின் தாயாரை நன்றாக கவனித்தாலே போதும். இதற்கு தீர்வு இதுவாக மட்டுமே இருக்கமுடியும். அனைவரும் எளிதாக இதனை செய்து சரி செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: