Followers

Tuesday, July 16, 2019

நன்றி தெரிவிக்கும் நாள்


வணக்கம்!
          இன்றைய நாளை முழுவதுமாக மறந்துவிடுவார்கள். கலியுகத்தில் நன்றி தெரிவிப்பது என்பதை எல்லாம் மறந்துவிடுவார்கள் அல்லவா. வருடந்தோறும் இதனை சொன்னாலும் அனைவரும் மறந்துவிடுவார்கள்.

பொதுவாக நம்மிடம் எப்படிப்பட்ட குணம் இருந்தாலும் சரி எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் சரி நன்றியுணர்வை மட்டும் நாம் காட்டிவிட்டால் போதும் கண்டிப்பாக உயர்ந்து விளங்கலாம். எனக்கு நீங்களும் ஏதோ விதத்தில் ஒரு குருவாக இருந்து இருக்கலாம். கற்றுக்கொள்வதற்க்கு ஒரு வழியை தேடி கொடுத்தாலும் அவர்களும் குருவே. உங்களுக்கு எல்லாம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்கு எந்த ஒரு கலையும் மற்றும் ஒரு விசயத்தையும் கற்றுக்கொடுத்த அனைவருக்கும் உங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி வையுங்கள் அவர்களை தொடர்புக்கொண்டு நன்றியை தெரிவியுங்கள்.

எனக்கு ஆன்மீகம் கற்றுக்கொடுத்த குருவிற்க்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் மற்றும் ஒவ்வொரு துறையிலும் எனக்கு கற்றுக்கொடுத்த அனைத்து குருவிற்க்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். அனைவரையும் நான் தொடர்புக்கொண்டு பேசிவிட்டேன். நீங்களும் இதனை செய்யலாமே.

                                               இன்றைய நாள் குரு பூர்ணிமா.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: