Followers

Monday, July 15, 2019

வாரிசுகள் வாழ்க்கை சிறக்க என்ன செய்யவேண்டும்?


ணக்கம்!
          உங்களின் வாரிசுகள் நன்றாக வாழவேண்டும் என்றால் நீங்கள் ஒரு சந்நியாசி போல வாழ கற்றுக்கொள்ளவேண்டும். உங்களின் அருகில் நன்றாக தற்பொழுது இருப்பவர்களை கவனித்து பாருங்கள் அவர்களின் தந்தை ஒரு சந்நியாசி போல இருப்பார்கள்.

சந்நியாசி போல் வாழ்ந்தால் வாரிசு வாழ்க்கையில் ஏதோ ஒன்று நன்றாக கொடுக்க ஆரம்பிக்கின்றது என்பதை பலரின் வாழ்க்கையில் பார்த்து இருக்கிறேன். வாரிசுகள் நன்றாக இருப்பதற்க்காக சந்நியாசி போல செல்லவேண்டுமா என்று கேட்கலாம். வாரிசுகள் நன்றாக இருப்பதற்க்காக தான் உங்களின் வாழ்க்கை இருக்கும் என்பதால் இதனை செய்யவேண்டும்.

சந்நியாசி போல எப்படி இருப்பது என்பதில் கேள்விகள் வரும் அல்லவா. பெரும்பாலும் ஆடம்பரத்தை விரும்பாதீர்கள். ஆடம்பரம் தேவைப்படும் இடத்தில் மட்டும் செய்யுங்கள். ஆடம்பரத்தால் உங்களின் வியாபாரம் நடக்கும் என்றால் அந்த இடத்தில் செய்யலாம். மற்ற இடத்தில் சந்நியாசி போல இருத்தல் நலம்.

பெரும்பாலும் கோவிலை நோக்கி உங்களின் பயணம் இருக்கவேண்டும். கொஞ்ச நேரம் உங்களுக்கு ஒய்வாக இருந்தாலும் அந்த ஒய்வு நேரத்தில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வந்துவிடவேண்டும். கோவிலுக்குள் உள்ளே செல்லமுடியாவிட்டாலும் வெளியில் இருந்து கும்பிட்டுவிட்டு வரவும்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்துக்கொண்டு வாருங்கள். கோவில் மற்றும் புண்ணியநதிகளை விட ஆன்மீகத்தில் இருப்பவர்களோடு தொடர்பில் இருக்கும்பொழுது அவர்களின் வழிகாட்டுதல் சிறந்ததாக இருக்கும். இதனை கடைபிடித்து வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: