Followers

Friday, July 26, 2019

சோதிட தொழில்


வணக்கம்!
         தற்பொழுது எல்லாம் சோதிடம் நன்கு தெரிந்தவர்கள் தான் சோதிடம் பார்க்க வருகின்றனர். சோதிடத்தைப்பற்றி நல்ல அறிவை பெற்று இருக்கின்றனர். இது ஆரோக்கியமான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். தன்நிலை மற்றும் தன்னுடைய குடும்பத்திற்க்கு ஒரு வழிகாட்டியாக இவர்கள் இருப்பார்கள்.

ஒரு சிலர் ஆர்வகோளாறு காரணமாக சோதிடத்தை நன்கு தெரிந்துக்கொண்டு சோதிட தொழில் செய்யலாமா என்று நினைப்பதும் உண்டு. நான் என்ன சொல்லுவேன் என்றால் உங்களுக்கு இந்த வேறு எந்த ஒரு தொழிலும் செய்யமுடியாமல் வழியே இல்லை என்ற ஒரு நிலை வரும்பொழுது மட்டுமே இந்த தொழிலை தேர்ந்தெடுங்கள்.

இதனைப்பற்றி பல்வேறு பதிவுகளை தந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லுவதற்க்கு காரணம் இருக்கின்றது. சோதிடதொழிலில் போட்டியை உருவாக்க கூடாது என்ற நினைப்பில் இதனை எழுதவில்லை. நல்ல வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டும் என்ற நினைப்பில் இதனை எழுதுகிறேன். முடிந்தவரை போராடி வேறு வேலையை பாருங்கள்.

ஒரு சாதாரணமான தொழிலுக்கும் இந்த தொழிலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கின்றது. முதலில் செய்யும்பொழுது நன்றாகவே இருக்கும் நாட்கள் செல்ல செல்ல உங்களுக்கே நான் சொல்லுவது புரிய வரும். அனுபவத்தில் தான் என்ன என்பது புரியும்.

அம்மன் கோவில் கட்டும்பணிக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வையுங்கள். இந்த பணிக்காக தான் நிறைய வேலை செய்து வருகிறேன். அம்மன் கோவிலுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்கி வைத்திருக்கிறேன். விரைவில் கட்டுமான பணி தொடங்க இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: