Followers

Tuesday, July 30, 2019

ஈசானியத்தின் அருள்


வணக்கம்!
          ஈசானியத்தைபற்றி நாம் பார்த்தோம். இதில் தாயை கவனிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஈசானிய மூலை சரியாக அமையாது என்று சொல்லிருக்கிறேன். இதனை விட முக்கியமான ஒன்றை சொல்லுகிறேன்.

உங்களின் வீட்டில் இல்லறத்தில் இருக்கும் பெண். குடும்ப தலைவி அதிகமாக அனைத்து விசயத்திலும் தலையீடு செய்தால் அதாவது அவர் மீனாட்சி ஆட்சி நடத்தினாலும் ஈசானியத்தில் இருந்து உங்களுக்கு அருள் கிடைக்காது.

இன்றைய காலத்தில் அனைத்து வீட்டிலும் பெண்களின் ஈகோ அதிகமாக இருக்கின்றது என்று சொல்லலாம். பெண்களின் தலையீடு அதிகமாக இருக்கும் வீட்டை நீங்கள் பார்த்தால் ஒன்று இந்த தலைமுறையிலேயே அந்த வீடு அடிப்பட்டுவிடும். 

ஒரு சில வீடுகளில் அவர்களின் வாரிசுகளின் வாழ்க்கை சரியாக இருக்காது. வாரிசுகளுக்கு ஈசானியத்தில் இருந்து சக்தி கிடைக்காது. அவர்கள் வாழும் வீடும் சரியாக இருக்காது. இதனை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் உங்களின் வீட்டை நீங்கள் சரி செய்துக்கொள்ளுங்கள்.

நாளை ஆடி அமாவாசை உங்களின் முன்னோர்களுக்காக நீங்கள் நிறைவேற்றும் ஒரு கடமையை செய்யும் நாள் என்பதால் உங்களின் கடமையை நிறைவேற்ற மறக்கவேண்டாம். உங்களின் முன்னோர்களுக்காக சிறப்பு பூஜை இருக்கின்றது இதிலும் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: