Followers

Friday, November 29, 2019

திருமண தடை 1


வணக்கம்!
         திருமணத்தடைக்கு முதல் காரணமாக இருப்பது அவர்களின் ஜாதகத்தில் லக்கனாதிபதி அமர்ந்து இருக்கும் நிலையை ஆராயவேண்டும். லக்கனாதிபதி மறைவுஸ்தானத்தில் ஏறிவிட்டால் அவர்க்கு திருமணம் முப்பது வயதிற்க்கு மேல் நடைபெறும்.

ஒரு சிலருக்கு முப்பது வயதிற்க்கு மேல் சென்றாலும் திருமணம் நடைபெறாமல் சென்றுவிடுகின்றது. ஒரு சிலருக்கு இளம்வயதில் திருமணம் நடைபெற்றாலும் திருமணம் சேபிப்பதில்லை. திருமணத்திற்க்கு தள்ளி போவதற்க்கும் இது ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றது.

எந்த ஒரு நல்ல விசயம் உங்களுக்கு நடைபெற்றாலும் அந்த நல்ல விசயத்திற்க்கு என்று நீங்கள் நிறைய போராடி பெறவேண்டும் என்பதை லக்கனாதிபதி மறைவுஸ்தானம் ஏறினால் காட்டும். லக்கனாதிபதி மறைவுஸ்தானம் ஏறினால் திருமணமும் போராட்டமாகவே அமைகின்றது.

லக்கானதிபதியை சரி செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். உங்களின் உடலுக்கும் தேவையான ஊட்டசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் அதோடு பரிகாரத்தையும் சேர்ந்து செய்யும்பொழுது இது வெற்றிபெறும்.

பரிகாரம் மட்டும் செய்வதோடு அல்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டசத்தை நன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் நல்ல சக்தியோடு இருப்பதை நீங்கள் உணர்ந்த பிறகு திருமணத்திற்க்கு வரம் தேடினால் விரைவில் அமையும். பல பேர்க்கு இந்த அனுபவத்தை நான் பார்த்து இருக்கிறேன்.

திருமண தடைக்கு என்று சிறப்பு பரிகாரத்தை ஜாதகத்தில் செய்ய இருக்கிறோம். திருமணதடையில் இருப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: