Followers

Wednesday, November 20, 2019

தோஷம் வரும் வழி


வணக்கம்!
          தோஷம் வரும் வழியின் தலைப்பில் இன்றைய ஜென்மத்தில் நாம் செய்த தவறு என்ன அதில் இருந்து எப்படிப்பட்ட தோஷம் வரும் என்பதைப்பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இன்றைய காலத்தில் அநீதி செய்தால் அதில் இருந்து தோஷம் வரும் அது எப்படி வேலை செய்கின்றது என்பதைப்பற்றி பார்க்கலாம்.

கிராமபுறங்களில் இது அதிகமாக நடைபெறும். ஒரு வியாபாரி ஏதோ ஒன்றை விற்க வருவார் அவரிடம் வீணாக தகறாறு செய்து அதனை பிடுங்கிவிடுவார்கள். இது ஒரு ஊரில் ஒருத்தன் இப்படி செய்வான். வருபவரை சண்டை போடுவது வேலையாகவே வைத்திருப்பார்.

உங்களை நாடி ஒருவர் விற்பனை செய்ய வருகின்றார் என்றால் ஒன்று வாங்கவேண்டும் இல்லை என்றால் அமைதியாக இருந்துவிடவேண்டும். இதனை செய்யாமல் அவரை மிரட்டி அவரின் பொருள்களை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவருக்கு தோஷம் என்பது ஏற்படும்.

பிற்காலத்தில் சம்பந்தப்பட்ட நபர் நிறைய கஷ்டத்தை அனுபவிப்பார். தீராத நோயும்  அவரை பிடித்துவிடும். இதனை நான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். நோயால் யாரும் கவனிக்காத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு அவர் இறக்கவும் நேரிடும்.

இது நகர்புறங்களில் அந்தளவுக்கு நடைபெறுவதில்லை கிராமபுறங்களில் நிறைய நடைபெறும். கிராமபுறத்தில் நீங்கள் இருந்தால் இதனை செய்யகூடாது செய்கின்ற நபர்களிடம் இதனைப்பற்றி சொல்லி அவர்களை திருத்தலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: