Followers

Monday, November 11, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
          கருக்கலைப்பு பற்றி நாம் பதிவில் சொல்லியவுடன் நிறைய பேர்கள் இதற்கு என்று தனியாக பரிகாரம் எதுவும் இருக்கின்றதா அல்லது ஏதாவது வழிபாட்டு முறைகள் இருக்கின்றனவா என்று நிறைய பேர்கள் என்னிடம் கேட்டனர்.

முக்கால்வாசி பேருக்கு இந்த பிரச்சினை இருக்கின்றது என்பது தெரிகின்றது. இங்கு தான் நாம் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். நம்முடைய வழிபாடுகள் அனைத்தும் வீணாக போவதற்க்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகளை நாம் முன்கூட்டியே செய்துவிடுவதால் நமக்கு நாம் செய்யும் பலன் கிடைப்பதில்லை.

நாம் கடவுளுக்கு வருவோம் இராமர் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க இராமேஷ்வரத்தில் கையால் சிவ லிங்கத்தை பிடித்து அதற்கு பூஜை செய்து அவரின் தோஷத்தை போக்கியுள்ளார். இது தான் நமக்கு கிடைக்கும் ஒரு துடுப்பு சீட்டு மற்றபடி யாரும் இதனை எல்லாம் செய்யவில்லை என்று எனது அறிவுக்கு கிட்டியதை வைத்து சொல்லுகிறேன்.

நேராக இராமேஸ்வரம் செல்லுங்கள். ஒரு ஒதுக்குபுறமான கடற்பரப்பில் அமர்ந்து ஒரு லிங்கத்தை உருவாக்குங்கள். மணலிலேயே செய்யுங்கள். அதற்கு பூ எல்லாம் வைத்து நீங்களே உங்களுக்கு தெரிந்த சிவ மந்திரத்தை ஒதி வணங்கிவிட்டு வரலாம். அதனை அப்படியே கூட விட்டுவிடலாம். கடலில் நீராடுவதும் முக்கியம் அதோடு இராமநாத சுவாமியையும் வணங்கிவிட்டு வாருங்கள். எனக்கு தெரிந்ததை வைத்து நான் சொல்லுகிறேன்.

நீங்கள் இதற்கு மேலும் இப்படிப்பட்ட தவறை செய்யாமல் இருங்கள் மற்றபடி இதற்கு என்று பரிகாரம் செய்வதில்லை. நவ அம்மன் (சண்டி) யாகம் உங்களின் அருகில் எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்துக்கொள்ளுங்கள். சண்டி யாகத்தில் நிறைய பாவங்களுக்கு பரிகாரம் தேடலாம் அதனால் இதனை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: